NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு
    நேற்று காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளுக்கு அருகில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு

    எழுதியவர் Srinath r
    Nov 10, 2023
    09:55 am

    செய்தி முன்னோட்டம்

    வடக்கு காசா பகுதிகளில், இஸ்ரேல் தினமும் 4 மணி நேர போர் இடை நிறுத்தத்தை தொடங்கும் என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் இஸ்ரேல் ராணுவ அமைச்சர், குறிப்பிட்ட உள்ளூர் பகுதிகளில் மட்டுமே இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இது போரின் தீவிரத்தை குறைக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் நடக்கும் இடத்திலிருந்து மக்கள் வெளியேற இரண்டு மனிதாபிமான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், காசாவிற்குள் அனுப்பப்படும் நிவாரண உதவிகளை, 150 லாரிகளாக அதிகரிக்க முயற்சி எடுப்பதாக கூறியுள்ளார்.

    2nd card

    50 தீவிரவாதிகளை கொன்றதாக இஸ்ரேல் தகவல்

    காசா நகரத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளை சுற்றி, நேற்று இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது.

    அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே, ஹமாஸ் அமைப்பின் 'ராணுவ பகுதி' மீது நடத்திய தாக்குதலில், 50 "தீவிரவாதிகள்" கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

    அல்-குட்ஸ் மருத்துவமனை அருகே, ராணுவ டேங்குகளை பார்த்ததாக அங்கிருந்த மக்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தல் அல்-ஹவா பகுதியின் தென்மேற்கில் 2.3 கிமீ (1.4 மைல்) தொலைவில் உள்ள அல்-குட்ஸ் மருத்துவமனையைச் சுற்றி, கடுமையான மோதல் நேற்று நடைபெற்றது.

    காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை வளாகமான அல்-ஷிஃபா மருத்துவமனையில், 2,000 நோயாளிகளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

    3rd card

    தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்

    கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்கத்திற்கு பின், இஸ்ரேல்-பாலஸ்தீனியம் இடையே போர் மூண்டது.

    ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 1,400 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 240க்கும் மேற்பட்டோர் பணைய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இஸ்ரேலின் பதில் தாக்குதலுக்கு தற்போது வரை 10,500 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 லட்சம் பாலஸ்தீன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    4th card

    உதவிகளை அதிகரிக்க கோரும் ஐநா

    ஐநா அமைப்பு, காசாவிற்கு வரும் உதவிகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளதாக கூறியுள்ளது.

    "காசாவிற்குள் வரும் உதவிகள், மக்களின் தேவைகளின் ஒரு பகுதியை மட்டுமே பூர்த்தி செய்கிறது. இது சகிக்க முடியாத மனிதாபிமான சூழ்நிலையை உருவாக்குகிறது" என தெரிவித்துள்ளது.

    போர் தொடங்கியவுடன் காசாவிற்குள் செல்லும் அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் துண்டித்தது.

    பின்னர், பல்வேறு நாடுகளின் கோரிக்கையை அடுத்து, எகிப்தின் ரஃபா எல்லை வழியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

    கடந்த அக்டோபர் 21ஆம் தேதி முதல் தற்போது வரை, 756 லாரிகள் உதவிப் பொருட்களுடன் காசாவிற்குள் நுழைந்துள்ளது..

    போர் தொடங்கும் முன் தினமும் சராசரியாக இஸ்ரேல் மற்றும் எகிப்தில் இருந்து, 500 லாரிகள் காசாவிற்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் பிரதமர்
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்

    இஸ்ரேல்

    எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இந்தியா ஏன் மறுத்தது? இந்தியா
    காசா பகுதி மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    'இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை என்பது வெட்கக்கேடானது': பிரியங்கா காந்தி  பிரியங்கா காந்தி
    பாலஸ்தீன உதவி குழுக்களுக்கு இணைய வசதியை வழங்க முன்வந்தது 'ஸ்டார்லிங்க்': எலான் மஸ்க் அறிவிப்பு  இஸ்ரேல்

    அமெரிக்கா

    இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா ஜோ பைடன்
    இஸ்ரேல் போர்: மேலும் இரு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் ஹமாஸ்
    இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஹமாஸ்
    ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம் எதிரொலி- 2025 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட டாம் குரூஸ் திரைப்படம் ஹாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025