NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனடாவுடன் மோதல்; ஐநா சபையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய்சங்கர் உரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடாவுடன் மோதல்; ஐநா சபையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய்சங்கர் உரை
    ஐநா சபையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய்சங்கர் உரை

    கனடாவுடன் மோதல்; ஐநா சபையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய்சங்கர் உரை

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2023
    12:37 pm

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியா மற்றும் கனடா இடையே உறவு கடுமையாக சீர்குலைந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நாளை நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையில் ஆற்றும் உரையை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

    முன்னதாக, கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் மர்மமான நபர்களால் கொல்லப்பட்டார்.

    இந்த கொலையில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

    கனடா பிரதமர் தனது குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்களை வழங்காத நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே மோதலை அதிகரித்துள்ளது.

    Jaishankar speech in United Nations

    ஐநா சபையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரை

    கனடா பல காலமாக காலிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்நாட்டு அரசே இதை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

    இந்திய புலனாய்வு அமைப்புகளும், கனடாவில் தீவிரமாக செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்து ஆதாரங்களை வெளியிட்டும் கனடா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்நிலையில், ஐநா சபை கூட்டத்தில் புதன்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார்.

    அவரது உரையில் ஜி20 உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகம் இடம்பெறும் என்றாலும், கனடா விவகாரத்தில் கடுமையான பதிலடி அவரது உரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    ஐநா சபை
    மத்திய அரசு

    சமீபத்திய

    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ
    மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள் உடல் ஆரோக்கியம்
    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா

    ஐநா சபை

    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் உலக செய்திகள்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை உலகம்
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா

    மத்திய அரசு

    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு  இந்தியா
    சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கவிருக்கும் மத்திய அரசு இந்தியா
    எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன? எலக்ட்ரிக் வாகனங்கள்
    டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும்  ஜி20 மாநாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025