NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான் 
    பல ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும்.

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 11, 2023
    12:03 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் துணை நிரந்தர பிரதிநிதி ஜமான் மெஹ்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில்(UNHRC) உறுப்பினர்களிடம் உரையாற்றும் போது, ​​ஹமாஸ் குழுவுடனான தற்போதைய மோதல் குறித்து இஸ்ரேலை கடுமையாக சாடினார்.

    "போர் பிரகடனம் என்று அழைக்கப்படும், பொதுமக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் ஆழ்ந்த துயரத்தை தருகின்றன. அதிகரித்து வரும் இந்த பிரச்சனையில் மனித உயிர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்," என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்(OIC) பிரதிநிதியான மெஹ்தி கூறினார்.

    தடை செய்யப்பட்ட காசா பகுதியில் இருந்து கடுமையான ராக்கெட் தாக்குதலை எதிர்கொண்ட இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை போர் நிலையை அறிவித்தது.

    பல ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும்.

    டிஜிஸ்ட்

    'இரு நாடுகளும் தீர்மானத்தை அமல்படுத்த வேண்டும்': ஜமான் மெஹ்தி

    இதனையடுத்து, பாலஸ்தீனப் பயங்கரவாதிகள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு பெரும் மோதல்கள் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் துணை நிரந்தர பிரதிநிதி ஜமான் மெஹ்தியின் கோரிக்கையின் பேரில், "ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்திலும் பிற இடங்களிலும்" ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு UNHRC உறுப்பினர்கள் நேற்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

    மேலும், பாலஸ்தீனத்தை ஆதரித்த ஜமான் மெஹ்தி, "சட்டவிரோத வெளிநாட்டு ஆக்கிரமிப்பை இயல்பாக்குவதற்கும் நிரந்தரமாக்குவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வன்முறையை வளர்க்கின்றன." என்று கூறினார்.

    இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை தீர்க்க இரு நாடுகளும் தீர்மானத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான பகுதி அவர்களிடம ஒப்படைக்கப்பட வேண்டும் எனபதையும் அவர் குறிப்பிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    ஐநா சபை
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    பாகிஸ்தான்

    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் அமைச்சரவை
    பாகிஸ்தான்: டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதியதால் 16 பேர் பலி உலகம்
    மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி  ஆப்கானிஸ்தான்
    இஸ்ரோவை கேலி செய்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சந்திராயன்-3 திட்டத்திற்கு  பாராட்டு இந்தியா

    ஐநா சபை

    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் உலக செய்திகள்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை அமெரிக்கா
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  உலகம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? அமெரிக்கா
    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இஸ்ரேல்
    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025