NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர் 
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை ஒரு காஷ்மீரி சமூக-அரசியல் ஆர்வலர் கடுமையாக சாடியுள்ளார்.

    பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 20, 2023
    10:16 am

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாயன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 54வது அமர்வில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை ஒரு காஷ்மீரி சமூக-அரசியல் ஆர்வலர் கடுமையாக சாடினார்.

    ஸ்ரீநகரைச் சேர்ந்த தஸ்லீமா அக்தர், பல காலமாக தான் சமூக ஆர்வலராக பணியாற்றி வருவதாகவும், பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மீது நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களின் சொல்லப்படாத கதைகளை ஆராய்ந்து வருவதாகவும் கவுன்சிலில் தெரிவித்தார்.

    "துரதிர்ஷ்டவசமாக, எனது குழந்தைப் பருவத்திலிருந்தே, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நான் கண்டிருக்கிறேன். இந்த பயங்கரவாதிகளால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்க முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். " என்று தஸ்லீமா உருக்கமாக உரையாற்றினார்.

    டியூஹ

    ஐநா கூட்டத்தில் மேலும் தஸ்லீமா அக்தர் கூறியதாவது:

    பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்கும் காரணத்திற்காகவே நான் என் இலக்கை நோக்கி உழைக்க தொடங்கினேன்.

    ஜம்மு காஷ்மீரில் ஏராளமான பொதுமக்கள் பல தசாப்தங்களாக தொடரும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பயங்கரவாதச் செயல்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய அச்சம் நிறைந்த கதைகளை நான் கண்டிருக்கிறேன். அதிர்ச்சியூட்டும் வகையில், இந்தக் கதைகளில் பெரும்பாலானவை வெளியுலகுக்குத் தெரியாது.

    பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

    காஷ்மீரில் அனாதைகள், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் நலிவடைந்த முதியோர்கள் ஆகியோருக்கு வீட்டில் உணவளிக்கக்கூட ஆளில்லை.

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் காஷ்மீர் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் தொடர்ந்து எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பதையும் உலகம் அறிய வேண்டும்.

    இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐநா சபை
    இந்தியா
    ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி
    புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு ஜோ பைடனின் முதல் பதிவு ஜோ பைடன்
    ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    உங்கள் வீட்டில் வைஃபை இணைப்பு விரைவில் வலுவாகவும் வேகமாகவும் மாறப்போகிறது தொலைத்தொடர்புத் துறை

    ஐநா சபை

    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் உலக செய்திகள்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை உலகம்
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா

    இந்தியா

    இந்தி திவாஸ் ஏன் கொண்டாடப்படுகிறது? இந்தியாவில் பேசப்படும் மொழிகள் என்ன? இந்தியா
    Sports Round Up : ஐசிசி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; பேட்மிண்டனில் இந்திய ஜோடி தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள் ஐசிசி
    உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை உயர்த்திய மத்திய அரசு வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 16 தங்கம் வெள்ளி விலை

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர் பாகிஸ்தான்
    ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை இந்தியா

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் ஐசிசி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025