NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை, வெளியானது இந்திய முதுமை அறிக்கை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை, வெளியானது இந்திய முதுமை அறிக்கை!
    இந்தியாவில் அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை, வெளியானது இந்திய முதுமை அறிக்கை

    இந்தியாவில் அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை, வெளியானது இந்திய முதுமை அறிக்கை!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 28, 2023
    11:56 am

    செய்தி முன்னோட்டம்

    2023ம் ஆண்டு 'இந்திய முதுமை அறிக்கை'யை வெளியிட்டிருக்கிறது ஐநா மக்கள்தொகை நிதியம். மக்கள் தொகை அறிவியலுக்கான சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்திருக்கிறது அந்த அமைப்பு.

    அந்த அறிக்கையில், 2050ம் ஆண்டு இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் 65% மக்கள் தொகையானது 35 வயதுக்குட்பட்டு இருக்கிறது. இந்தியாவின் இளம் மக்கள் தொகையே இந்தியாவின் வளமாகப் பார்க்கப்படுகிறது.

    ஆனால், அடுத்த சில பத்தாண்டுகளில் இந்த நிலை மாறும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வயதான மக்கள் தொகையானது மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியா

    எவ்வளவு உயரவிருக்கிறது வயதான மக்கள் தொகை? 

    கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 1 நிலவரப்படி, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கையானது, மொத்த மக்கள்தொகையில் 10.5% ஆக இருக்கிறது.

    2050ம் ஆண்டிற்குள் இது 20.8% ஆக உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நூற்றாண்டின் முடிவிற்குள் இந்தியாவின் வயதான மக்கள் தொகையானது 36% ஆக உயரும் எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது.

    இதுமட்டுமின்றி, இதே காலக்கட்டத்தில் 15 முதல் 59 வயதுக்குட்பட்ட மக்கள் தொயைும் சற்று சரிவைச் சந்திக்கும் என அந்த ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், 40% முதியவர்கள் தினசரி வாழ்க்கைக்குக் கூட சிரமப்படும் அளவிற்கு மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் இந்திய முதுமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஐநா சபை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    Asian Games 2023: தற்போது வரையிலான இந்திய அணியின் வெற்றி தோல்வி நிலவரம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    INDvsAUS: முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட்
    சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    இந்தியா-கனடா பிரச்சனையில் இருந்து ஓரங்கட்டுகிறதா அமெரிக்கா? அமெரிக்கா

    ஐநா சபை

    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் உலக செய்திகள்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை உலகம்
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025