உள்துறை: செய்தி
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா தலைமையில் நடைபெற்றது ஒரு உயர்மட்ட கூட்டம்
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அங்கு பாதுகாப்பு நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விவாதிக்க இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி போலீசார் இன்று தெரிவித்தனர்.
சித்தரிக்கப்பட்ட வீடியோ விவகாரம்: காங்கிரஸை கடுமையாக சாடினார் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இடஒதுக்கீடு குறித்து அவர் பேசுவது போன்ற ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ வைரலானதை அடுத்து, காங்கிரஸ் கட்சியை அவர் இன்று கடுமையாக சாடினார்.
நூலிழையில் உயிர தப்பினார் அமித்ஷா: ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு
பீகாரில் உள்ள பெகுசராய் நகரில் இருந்து அமித்ஷா புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் 2024: உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தென்காசிக்கு வருகிறார்
நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியின் முக்கிய தலைவர்கள் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சி சார்பிலும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தென்காசிக்கு வருகிறார்.
'தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் மேம்படுத்தியிருக்க வேண்டும்': அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பத்திரங்கள் திட்டம்(இபிஎஸ்) குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை "முழுமையாக மதிக்கிறேன்" என்று கூறினார். ஆனால் அதை ரத்து செய்வதற்கு பதிலாக மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி அவற்றை பெற்றுக் கொள்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
'2024 பொது தேர்தலுக்கு முன்பு குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும்': அமித்ஷா
2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை(திருத்தம்) சட்டம்(சிஏஏ) இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெரிவித்தார்.
பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு
உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மியான்மரை ஒட்டிய வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பைப் பராமரிக்கவும் இந்தியா மற்றும் மியான்மர் இடையே இருந்த எல்லை பகுதியை மூடவிருப்பதாகவும், இதனால் அப்பகுதியில் இருந்த நடமாட்டத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்க கோரி சாலையோரத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கேரள ஆளுநருக்கு Z+ பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் ஆளும் சிபிஐ(எம்) கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்புக்கு(எஸ்எஃப்ஐ) இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ராஜ்பவனுக்கும் ஆளுநருக்கும் Z+ பாதுகாப்பை வழங்கியது.
பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை
பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்தை, பயங்கரவாதத்தை தூண்டுவதற்காகவும், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்புவதற்காகவும் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது
இந்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்
கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல்
2022ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கர்நாடகாவில் உள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிய தடை விதித்தது. இதனால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார்
நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக, 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு
நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டதால் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த எம்பிக்கள் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான கடந்த டிச.,13ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது.
குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா காலமானார்
மத்திய கிழக்கு நாடான குவைத்தின் ஆளும் எமிர், ஷேக் நவாப் அல் அகமது அல் சபா, உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு வயது 86.
சிறைவாசிகளுக்கு வீடியோ கால் பேசும் வசதி அறிமுகம்
தமிழகத்தில் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வரவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
'சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்' - ஆய்வுக்கு பின் மத்தியக்குழு தகவல்
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா, 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023 ஆகியவை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
மணிப்பூரின் பழமையான ஆயுதக் குழுவான UNLF, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
மணிப்பூரின் பழமையான தீவிரவாதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு
குடியுரிமை(திருத்தம்) சட்டத்தின்(CAA) இறுதி வரைவு அடுத்த ஆண்டு மார்ச் 30 க்குள் தயாராக இருக்கும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நேற்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மறுப்பு
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரி, புதுச்சேரி சட்டமன்றத்தில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று முதல் உயர்கிறது இங்கிலாந்துக்கான விசா கட்டணம்; மாணவர்களின் கல்வி கட்டணம் பாதிக்குமா?
இங்கிலாந்து அரசு அறிவித்திருந்த விசா கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது.
மத்திய உள்துறை அமைச்சக ஊழியா்கள் மீது அதிக ஊழல் புகாா்: சிவிசி தகவல்
மத்திய அமைச்சகங்களியிலேயே உள்துறை அமைச்சகத்தில் தான் அதிக ஊழல் புகாா்கள் பதிவாகியுள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி) தெரிவித்துள்ளது.
மணிப்பூர் வன்முறை: கூடுதலாக 1,400 பாதுகாப்புப்படை வீரர்களை அனுப்பிய மத்திய அரசு
மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்துள்ள நிலையில், குறைந்தபட்சம் 10 மத்திய துருப்புக்களை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது.
'மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்': அமித்ஷா
மணிப்பூர் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற பயங்கரமான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு புதிய சீருடைகள் அறிவிப்பு
தனியார் படைகளில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் விரைவில், மத்திய ஆயுதப்படை போலீஸாருக்கு புதிய சீருடை மாற்றப்பட இருக்கிறது.
தமிழகத்தில் இருந்து 25 NDA தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்: அமித்ஷா
வரும் 2024 மக்களவை தேர்தலின் போது, தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 25 தேசிய ஜனநாயகக் கூட்டணி(NDA) தலைவர்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார்.
மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா
மணிப்பூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(ஜூன் 1) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று மாலை மணிப்பூரில் தரையிறங்கியதில் இருந்து உயர் அதிகாரிகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்
மணிப்பூரில் இன மோதல்களால் இதுவரை குறைந்தது 80 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று(மே 28) அங்கு புதிய கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில், ஒரு போலீஸ்காரர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
புதிய சிறைச்சாலை சட்டம்: மின்னணு கண்காணிப்பு சாதனங்கள், திருநங்கைகளுக்கு சிறப்பு விதிகள்!
உள்துறை அமைச்சகம், சமீபத்தில், திருத்தப்பட்ட சிறைச்சாலைகள் சட்டம் 2023 என்ற திட்டத்தை பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா
மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(மே 24) தெரிவித்துள்ளார்.
பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் மசோதா விரைவில் செயல்படுத்தப்படும்: அமித்ஷா
பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான தரவுகளை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று(மே 23) தெரிவித்தார்.
ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு
ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகம் சிறப்புப் படைகளை அங்கு அனுப்ப உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை
பாதுகாப்புப் படைகள், உளவுத்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரையின் பேரில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த 14 மெசஞ்சர் மொபைல் ஆப்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்
மார்ச் 19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
ராம நவமி மோதல்களால் பல்வேறு மாநிலங்களில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் இன்று(ஏப் 5) அறிவுரை வழங்கியுள்ளது.