NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு
    இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த எல்லை பகுதியை மூட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு

    பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 08, 2024
    05:13 pm

    செய்தி முன்னோட்டம்

    உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மியான்மரை ஒட்டிய வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பைப் பராமரிக்கவும் இந்தியா மற்றும் மியான்மர் இடையே இருந்த எல்லை பகுதியை மூடவிருப்பதாகவும், இதனால் அப்பகுதியில் இருந்த நடமாட்டத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

    இதனை தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் அமித்ஷா.

    "இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மியான்மர் எல்லையில் உள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பைப் பராமரிக்கவும் இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான சுதந்திர இயக்க முறைமையை (FMR) ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் (MHA) முடிவு செய்துள்ளது" என்று அமித்ஷா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த செவ்வாயன்று, அமித்ஷா, மியான்மர் எல்லையின் 1,643-கிலோமீட்டர் நீளத்திற்கு வேலி அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.

    மியான்மர்

    மணிப்பூர் மற்றும் மிசோரமின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கை

    முன்னர் இந்த FMR மூலம், எல்லையில் வசிப்பவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல், இரு நாட்டிற்குள்ளேயும் 16 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கோரியும், கிளர்ச்சியாளர்கள் வன்முறை போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ரக்கைன் மாநிலம் மற்றும் பல பிராந்தியங்களில் கடந்த அக்டோபர் முதல் ஆயுதமேந்திய இனக்குழுக்களுக்கும், மியான்மர் ராணுவத்திற்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இரு தரப்புக்கும் இடையேயான போராட்டம், நவம்பர் முதல் பல முக்கிய மியான்மர் நகரங்கள் மற்றும் இந்தியாவின் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் வேகமாக அதிகரித்து வருகிறது.

    இது மணிப்பூர் மற்றும் மிசோரமின் பாதுகாப்பிற்கான கவலைகளை அதிகரிக்கவே, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    எல்லை பகுதியை மூட மத்திய அரசு

    It is Prime Minister Shri @narendramodi Ji's resolve to secure our borders.

    The Ministry of Home Affairs (MHA) has decided that the Free Movement Regime (FMR) between India and Myanmar be scrapped to ensure the internal security of the country and to maintain the demographic…

    — Amit Shah (@AmitShah) February 8, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமித்ஷா
    மத்திய அரசு
    உள்துறை
    மியான்மர்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    அமித்ஷா

    சீக்கிய தீவிரவாதியை கொன்றதன் பின்னணியில் இந்தியா? மத்திய அமைச்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் அமெரிக்கா
    'மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்': அமித்ஷா  மணிப்பூர்
    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  தேமுதிக
    அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழா: கொடியசைத்து துவக்கி வைக்கிறார் அமித்ஷா அண்ணாமலை

    மத்திய அரசு

    சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு என்ன எதிர்காலத்தை வழங்கியுள்ளது? ஜம்மு காஷ்மீர்
    குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அமைச்சரவை
    அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும் உத்தரப்பிரதேசம்
    புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா நாடாளுமன்றம்

    உள்துறை

    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா

    மியான்மர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மணிப்பூர்
    மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம் மணிப்பூர்
    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  உலகம்
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025