NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது

    கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது

    எழுதியவர் Srinath r
    Dec 31, 2023
    11:54 am

    செய்தி முன்னோட்டம்

    இந்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    மத்திய குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட விக்ரம் சிம்ஹா, தற்போது விசாரணைக்காக வனத்துறை காவலில் உள்ளார்.

    கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் பல கோடி மதிப்புள்ள 196 மரங்கள் வெட்டப்பட்ட வழக்கில், கிடைத்துள்ள ஆவண சான்றுகளின் மூலம் வனத்துறையினர் விக்ரம் சிம்ஹா மீது சந்தேகம் அடைந்தனர்.

    இது தொடர்பாக வனத்துறையினர் அவரைத் தேடிய போது அவர் தலைமறைவானார். இந்நிலையில், பெங்களூரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக ஹாசன் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    2nd card

    50 முதல் 60 வயதான மரங்கள் வெட்டிக் கடத்தல்

    மாடுகள் மேய்ப்பதற்காக கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட, 12 ஏக்கர் அரசு நிலத்தில் இருந்த மரங்களை வெட்டி விக்ரம் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதை அப்பகுதியில் ஆய்வுக்குச் சென்ற தாசில்தார் கண்டறிந்து, வனத்துறைக்குத் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    விக்ரம் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே, அந்த மரங்கள் அனைத்தும் பல கோடி மதிப்புள்ள, 50 முதல் 60 வயதான மரங்கள் என தெரிவித்துள்ளார்.

    3rd card

    நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் சர்ச்சையில் சிக்கிய பிரதாப் சிம்ஹா

    இம்மாதத்தின் மத்தியில் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்திய இருவரில் ஒருவருக்கு, எம்பி பிரதாப் சிம்ஹா பாஸ் வழங்கிய நிலையில், அவர் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

    இருப்பினும் எம்பி பிரதாப், அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் தந்தை தனது தொகுதியைச் சார்ந்தவர் என்பதால் பாஸ் வழங்கியதாக விளக்கமளித்தார்.

    நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து, குளிர்கால கூட்டத் தொடரில் அமலியில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து வரலாறு காணாத வகையில், 146 எம்பிக்கள் இரு அவையிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    பெங்களூர்
    நாடாளுமன்ற அத்துமீறல்
    பாஜக

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    கர்நாடகா

    அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல் சித்தராமையா
    காவிரி விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம்  காவிரி
    இனிப்பான மங்களூர் பன் சாப்பிட்டதுண்டா? இதோ ரெசிபி சமையல் குறிப்பு
    திடீரென அதிகரித்த ஒக்கனேக்கல் நீர் வரத்து  தமிழ்நாடு

    பெங்களூர்

    இந்தியாவின் 5G உட்கட்டமைப்பைப் புகழ்ந்த நோக்கியாவின் சிஇஓ பெக்கா லண்ட்மார்க் நோக்கியா
    பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்! காவல்துறை
    திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி திருவண்ணாமலை
    பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம்  போராட்டம்

    நாடாளுமன்ற அத்துமீறல்

    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் போலீஸ் காவல் ஜனவரி 5ம் தேதி வரை நீட்டிப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு நாடாளுமன்றம்
    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார் ராகுல் காந்தி
    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு ராஜஸ்தான்

    பாஜக

    தெலுங்கானா தேர்தல்: ஸ்டண்ட் அடித்தும் டெபாசிட் இழந்த பவன் கல்யாண் தேர்தல்
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக, தெலுங்கானாவில் வென்றது காங்கிரஸ் தேர்தல் முடிவு
    மூன்று மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து இன்று ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள் பங்குச் சந்தை
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: தகுதி நீக்கப்படுவாரா எம்பி மஹுவா மொய்த்ரா? நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025