NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் வன்முறை: கூடுதலாக 1,400 பாதுகாப்புப்படை வீரர்களை அனுப்பிய மத்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் வன்முறை: கூடுதலாக 1,400 பாதுகாப்புப்படை வீரர்களை அனுப்பிய மத்திய அரசு 
    இந்த 10 மத்திய துருப்புகளில் சுமார் 1,400 பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளனர்.

    மணிப்பூர் வன்முறை: கூடுதலாக 1,400 பாதுகாப்புப்படை வீரர்களை அனுப்பிய மத்திய அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 07, 2023
    01:45 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்துள்ள நிலையில், குறைந்தபட்சம் 10 மத்திய துருப்புக்களை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது.

    இந்த 10 மத்திய துருப்புகளில் சுமார் 1,400 பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளனர்.

    இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றும் நாளையும் புதுடெல்லியில் வைத்து மணிப்பூரின் பழங்குடியின குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடி தலைவர்கள் மன்றத்துடன்(ITLF) பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    மணிப்பூரில் மே 3ஆம் தேதி தொடங்கி இன்று வரை நீடித்து வரும் இன மோதல்களால் இதுவரை 180 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    கடந்த சனிக்கிழமை, மெய்தே சமூகத்தை சேர்ந்த மூவரின் உடல்கள் அவர்களது வீட்டுக்குள் கண்டெடுக்கப்பட்டன.

    டி

    புதிய வன்முறைகளால் மணிப்பூரில் பதட்டநிலை

    அது நடந்து சில மணிநேரங்களுக்குள், சுராசந்த்பூர் பகுதியில் குக்கி சமூகத்தை சேர்ந்த மூன்று ஆண்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த புதிய வன்முறைகளால் மணிப்பூரில் பதட்டநிலை நிலவி வருகிறது.

    இதனையடுத்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்(CRPF) இருந்து 5 துருப்புகள், எல்லைப் பாதுகாப்புப் படையிலிருந்து(BSF) 3 துருப்புகள், சஷாஸ்த்ரா சீமா பால் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையிலிருந்து தலா 1 துருப்பு உட்பட பத்து மத்திய துருப்புகள் மணிப்பூருக்கு விரைந்துள்ளன.

    அதனால், பல்வேறு துணை ராணுவப் படைகளை சேர்ந்த 125 துருப்புகளும், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸை சேர்ந்த 164 குழுக்களும் தற்போது மணிப்பூரில் உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    உள்துறை
    அமித்ஷா

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    மணிப்பூர்

    மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்  உச்ச நீதிமன்றம்
    எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட அவைகள் நாடாளுமன்றம்
    மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ட்விட்டர்
    மணிப்பூர் கலவரம்: 4 பேர் கைது; முதல்வர் பதவி விலக மாட்டார் எனத்தகவல் கலவரம்

    உள்துறை

    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா

    அமித்ஷா

    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ நாகாலாந்து
    கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா கேரளா
    உலக பால் உற்பத்தியில் இந்தியா 33% பங்களிக்க வேண்டும்: அமித் ஷா இந்தியா
    அருணாச்சல் விவகாரம்: 'ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது': அமித்ஷா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025