NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா 
    பிரதமர் மோடி, தமிழகத்தில் இருந்து செங்கோலை பெற்று, புதிய நாடாளுமன்ற பவனில் வைப்பார்

    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா 

    எழுதியவர் Sindhuja SM
    May 24, 2023
    12:56 pm

    செய்தி முன்னோட்டம்

    மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(மே 24) தெரிவித்துள்ளார்.

    பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதைக் குறிக்கும், சுதந்திரத்தின் 'குறிப்பிடத்தக்க வரலாற்று' சின்னமான 'செங்கோல்' மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    "இந்த செங்கோல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகஸ்ட் 14, 1947அன்று இரவு 10.45 மணியளவில், பண்டிட் நேரு இந்த செங்கோலை தமிழகத்திலிருந்து பெற்றார். மேலும், பல மூத்த தலைவர்கள் முன்னிலையில், சுதந்திரத்தை அடைவதற்கான அடையாளமாக இதை ஏற்றுக்கொண்டார். இது ஒரு மாற்றத்தின் அடையாளம். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதற்கான சின்னம் இது" என்றும் அவர் கூறியுள்ளார்.

    details

    தமிழ் கலாச்சாரத்தில் செங்கோலுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு: அமித்ஷா 

    இந்தியாவில், குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தில் செங்கோலுக்கு பெரும் முக்கியத்துவம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

    "சோழ வம்சத்தின் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். பிரதமர் மோடி இந்த செங்கோலை ஏற்பார். அதன் பிறகு, அந்த செங்கோல் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைக்கப்படும்," என்று அவர் கூறினார்.

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு முன், பிரதமர் மோடி, தமிழகத்தில் இருந்து செங்கோலை பெற்று, புதிய நாடாளுமன்ற பவனில் வைப்பார் என அமித்ஷா கூறியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சுதந்திரத்தின் போது பெற்ற செங்கோல்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் வைக்கப்படும் என்றும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு
    பிரதமர்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்தியா

    பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள் ஜப்பான்
    ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ஜம்மு காஷ்மீர்
    பப்புவா நியூ கினியாவில் 'திருக்குறள்' மொழிபெயர்ப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி உலகம்
    2000 நோட்டு அறிவிப்பு எதிரொலி.. நகைக்கடைகளில் குவியும் மக்கள்? ரிசர்வ் வங்கி

    தமிழ்நாடு

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு  சென்னை
    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்  மாநில அரசு
    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்! காவல்துறை
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    பிரதமர்

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உலக செய்திகள்
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா

    பிரதமர் மோடி

    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  இந்தியா
    வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி இந்தியா
    மீண்டும் பிபிசி நிறுவனத்தில் சோதனை: அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை  இந்தியா
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!  வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025