NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நடவடிக்கை எடுக்க கோரி சாலையோரத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கேரள ஆளுநருக்கு Z+ பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடவடிக்கை எடுக்க கோரி சாலையோரத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கேரள ஆளுநருக்கு Z+ பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு

    நடவடிக்கை எடுக்க கோரி சாலையோரத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கேரள ஆளுநருக்கு Z+ பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 27, 2024
    03:55 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் ஆளும் சிபிஐ(எம்) கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்புக்கு(எஸ்எஃப்ஐ) இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ராஜ்பவனுக்கும் ஆளுநருக்கும் Z+ பாதுகாப்பை வழங்கியது.

    இன்று கொல்லத்தில் உள்ள நிலமேல் வழியாக ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் கான்வாய் சென்றபோது இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கறுப்புக்கொடி காட்டினர்.

    அதனால் கோபடைந்த ஆளுநர் கான், தனது வாகனத்தில் இருந்து இறங்கி சாலையோர மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனையடுத்து,அவருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கேரள தலைநகரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் ஆரிப் கானின் கான்வாய் இன்று நிறுத்தப்பட்டது.

    ஜ்னவ்

    காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆளுநர் போராட்டம்

    அவருக்கு எதிராக கறுப்புக் கொடிகளை ஏந்தியும், கோஷம் எழுப்பியும், இந்திய மாணவர் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தால் ஆத்திரமடைந்த ஆளுநர், காரில் இருந்து இறங்கி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்த ஆளுநர் கான், போராட்டங்கள் குறித்து முன்னரே தகவல் அளித்தும் அவர்கள் ஏன் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

    போராட்டக்காரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகலை பெற்றுக் கொள்ளும் வரை அங்கிருந்து செல்லமாட்டேன் என்று கவர்னர் கான் போலீசாரிடம் கூறியதால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த தர்ணா போராட்டம் நீடித்தது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    உள்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கேரளா

    டிசம்பர் 8ல் வெளியாகும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விக்ரம்
    7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை திருவனந்தபுரம்
    கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு சிறுமி கடத்தல் - விசாரணையினை தீவிரப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு  காவல்துறை
    கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு  கடத்தல்

    உள்துறை

    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025