NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் மேம்படுத்தியிருக்க வேண்டும்': அமித்ஷா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் மேம்படுத்தியிருக்க வேண்டும்': அமித்ஷா 

    'தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் மேம்படுத்தியிருக்க வேண்டும்': அமித்ஷா 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 16, 2024
    02:31 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பத்திரங்கள் திட்டம்(இபிஎஸ்) குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை "முழுமையாக மதிக்கிறேன்" என்று கூறினார். ஆனால் அதை ரத்து செய்வதற்கு பதிலாக மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா டுடே மாநாட்டில் பேசிய அவர், அரசியலில் கறுப்புப் பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றார்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற திட்டம் குறித்தும் பேசிய அமித் ஷா, அந்த திட்டம் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் தொடர்ச்சியான செலவுகளைக் குறைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.

    இந்தியா 

     தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் 

    தரவுகளின்படி, 1,260 நிறுவனங்கள்/தனிநபர்கள் ரூ.12,155.51 மதிப்புள்ள 22,217 பத்திரங்களை வாங்கியுள்ளனர். அதே நேரத்தில் 23 அரசியல் கட்சிகள் அவற்றை மீட்டெடுத்துள்ளன.

    இதில் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தான் அதிக நன்கொடையைப் பெற்றுள்ளது. ரூ.6,061 கோடி மதிப்பிலான பத்திரங்களை அக்கட்சி மீட்டெடுத்துள்ளது.

    கடந்த மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.

    இந்த பத்திரங்களை வழங்குவதை நிறுத்தவும், இந்த முறையில் அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6 ஆம் தேதிக்குள் தெரிவிக்கவும் அப்போது எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதால் அந்த சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உள்துறை
    அமித்ஷா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உள்துறை

    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா

    அமித்ஷா

    அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழா: கொடியசைத்து துவக்கி வைக்கிறார் அமித்ஷா அண்ணாமலை
    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புத்தகத்தினை வெளியிட்டார் அமித்ஷா - சர்ச்சை பேச்சால் பரபரப்பு  ராமேஸ்வரம்
    பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை - மு.க.ஸ்டாலின் பேச்சு திமுக
    டெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு  தாக்கல் செய்தது டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025