
சித்தரிக்கப்பட்ட வீடியோ விவகாரம்: காங்கிரஸை கடுமையாக சாடினார் அமித்ஷா
செய்தி முன்னோட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இடஒதுக்கீடு குறித்து அவர் பேசுவது போன்ற ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ வைரலானதை அடுத்து, காங்கிரஸ் கட்சியை அவர் இன்று கடுமையாக சாடினார்.
உள்துறை அமைச்சர் பேசுவது போன்ற போலி வீடியோவை தயாரித்து பகிர்ந்ததாக அசாமின் கவுகாத்தியைச் சேர்ந்த ரீதம் சிங் என்ற காங்கிரஸ் தொண்டர் நேற்று கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானாவில் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டை நீக்குவது குறித்து அமித்ஷா பேசியதை, அனைத்து இடஒதுக்கீடுகளையும் நீக்குவது குறித்து அவர் பேசியதாக ஒரு வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸிடம் ஆட்சியை இழப்பதற்கு முன்பு பாஜக அத்தகைய ஒதுக்கீட்டை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.
அமித்ஷா இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து பேசினார்.
காங்கிரஸ்
'ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீட்டை பாஜக நீக்காது': அமித்ஷா
அப்போது உண்மையான வீடியோவையும், சித்தரிக்கப்பட்ட வீடியோவையும் அவர் செய்தியாளர்களிடம் போட்டு காண்பித்தார்.
"மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது நியாயமற்றது மற்றும் அனுமதிக்க முடியாது. நாங்கள் ஏற்கனவே கர்நாடகாவில் அதை அகற்றிவிட்டோம். இதைத்தான் நான் வீடியோவில் கூறியுள்ளேன்" என்று அமித்ஷா இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
"பாஜக அனைத்து இடஒதுக்கீடுகளையும் ரத்து செய்யும் என்று போலி வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது" என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
உண்மையில், அவரது உரையின் போது, பட்டியலிடப்பட்ட சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பாஜக நீக்காது என்றும், யாரையும் அவ்வாறு செய்ய அனுமதிக்காது என்றும் அமித்ஷா கூறியிருந்தார்.