NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்
    மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி அவற்றை பெற்றுக் கொள்வார்

    தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 20, 2024
    08:46 am

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி அவற்றை பெற்றுக் கொள்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தங்க, வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் போன்றவை, நீதிமன்ற காவலில், பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானதால், நகைகள் அங்கேயே இருந்தன.

    முன்கதை

    ஏலம் விடவேண்டுமென தொடரப்பட்ட வழக்கு

    முன்னதாக, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டுமென சமூகஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கினை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம்,"நகைகளை ஏலம் விடுவதற்குப் பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலமாக தமிழகத்துக்கு மாற்றுவது நல்லது" என்று உத்தரவிடப்பட்டது.

    அதனை தொடர்ந்து, தற்போது மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வழக்கு கட்டணமாக ரூ.5 கோடியை கர்நாடகாவுக்கு, தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

    அதனால், ஜெயலலிதாவிற்கு சொந்தமான 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெயலலிதா
    ஜெயலலிதா
    ஜெயலலிதா
    உள்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஜெயலலிதா

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு ஜெயலலிதா
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஓ.பன்னீர் செல்வம்
    ஜெயலலிதாவை விட என் தாயாரும் மனைவியும் பலம் கொண்டவர்கள் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாஜக அண்ணாமலை
    வைரல் வீடியோ: அமெரிக்காவில் இருக்கும் அம்மா உணவகம் அமெரிக்கா

    ஜெயலலிதா

    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு ஜெயலலிதா
    பாஜக கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார் மைத்ரேயன்  பாஜக
    ஜெயலலிதா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அண்ணாமலை - அதிமுக அணியினர் கண்டனம்  ஜெயலலிதா

    ஜெயலலிதா

    பாஜக -அதிமுக கூட்டணி நீடிக்குமா? அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக செயலாளர்கள் அதிமுக
    அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி  எடப்பாடி கே பழனிசாமி
    ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம் தமிழ்நாடு
    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: உரிமை கோரிய தீபா மற்றும் தீபக் மனு தள்ளுபடி  ஜெயலலிதா

    உள்துறை

    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025