NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
    மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் கடந்த வாரம் நடந்த ராம நவமி கொண்டாட்டத்தில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன.

    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

    எழுதியவர் Sindhuja SM
    Apr 05, 2023
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    ராம நவமி மோதல்களால் பல்வேறு மாநிலங்களில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் இன்று(ஏப் 5) அறிவுரை வழங்கியுள்ளது.

    மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் கடந்த வாரம் நடந்த ராம நவமி கொண்டாட்டத்தில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன.

    இந்நிலையில், "ஹனுமன் ஜெயந்திக்கு தயாராகும் வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் MHA அறிவுரை வெளியிட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பேணப்படுவதையும், பண்டிகை அமைதியாகக் கடைப்பிடிக்கப்படுவதையும், சமுதாயத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் காரணிகளைக் கண்காணிப்பதையும் உறுதி செய்ய அரசாங்கங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன." என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்தியா

    பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் இணையம் துண்டிக்கப்பட்டுளளது

    பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியதையடுத்து,அந்த இரு மாநிலங்களும் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை, ஹவுராவில்(மேற்கு வங்கம்) நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டதால், பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டன.

    காவல்துறை மற்றும் கலகக் கட்டுப்பாட்டுப் படைகள் குவிக்கப்பட்ட போதிலும் மறுநாள் அந்தப் பகுதியில் மேலும் புதிய வன்முறைகள் வெடித்தன.

    அதன் பின், 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    பீகாரில், ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை மோதல்கள் வெடித்ததை அடுத்து, குறைந்தபட்சம் 10 மத்திய ஆயுதப் படைகள் பீகாருக்கு அனுப்பப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மேற்கு வங்காளம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா
    உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர் உலக செய்திகள்
    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து இந்திய அணி
    ஆப்பிள் டெவலப்பர்கள் WWDC 2023 நிகழ்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆப்பிள் நிறுவனம்

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025