இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: செய்தி
இஸ்ரேல் போர்: மேலும் இரு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த மேலும் இரண்டு பிணையக் கைதிகளை விடுவித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா
இஸ்ரேலுக்கு, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல்
ஹமாஸ் போராளிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக ஒரே இரவில் காசா பகுதிக்குள் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே நாளில் 266 பாலஸ்தீனியர்கள் பலி
காசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளன- ஐநா
இஸ்ரேல், காசாவுக்கு செல்லும் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றை துண்டித்து விட்ட நிலையில், காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர்
பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போருக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேலை கடுமையாக கண்டித்து பேசிய சவுதி இளவரசர் துர்கி அல் பைசல், இந்தியா சுதந்திரத்திற்கு போராடிய முறை தான் சரியானது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கிற்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா
ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகும் நிலையில், காசா பகுதியில் வாழும் மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள், தூங்கும் பைகள் போன்ற நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் ஆகியோர் சந்தித்தனர்.
மேற்கு கரையில் மசூதி மேல் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில், ஜெனின் அகதிகள் முகாமில் உள்ள அல்-அன்சார் மசூதி மேல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனைகளுக்கும் ஈரானுக்கும் என்ன தொடர்பு: ஒரு வரலாற்று பார்வை
ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பயண எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்
எகிப்து, ஜோர்டான் நாடுகளில் உள்ள இஸ்ரேலிகள் உடனே வெளியேறவும், மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்ரேலிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.
நிவாரண பொருட்களுடன் 20 லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன
பாலஸ்தீனிய மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற 20 லாரிகள் எகிப்தின் 'ரஃபா எல்லை' வழியாக, காசாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மசூதிக்கு சென்ற கனேடிய பிரதமர் ட்ரூடோவை அவமானப்படுத்திய மக்கள்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டொரோண்டோவில் உள்ள ஒரு மசூதிக்கு சென்றிருந்த போது அவருக்கு எதிராக மக்கள் கூச்சலிட்டு பிரச்சனை செய்த விவகாரம் தற்போது வைராகி வருகிறது.
போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம்- இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
போரால் பாதிப்படைந்துள்ள காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்லும், எகிப்து-காசா எல்லையான ரஃபா எல்லையை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பார்வையிட்டார்.
இஸ்ரேல் ஹமாஸ் போரை தூண்டும் போலி செய்திகள்
இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியது முதலே, சமூக வலைதளங்களில் போலி செய்திகளும் பரவத் தொடங்கி விட்டன.
பாலஸ்தீன அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி; இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல்
பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸுடன் வியாழக்கிழமை (அக்டோபர் 19) தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, காசா மருத்துவமனையில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது முதல் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரின் விளைவாக, அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
பாலஸ்தீனத்தில் போர் நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்க கேபிடல் கில்லில் போராடியவர்கள் கைது
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஏற்பட, அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்த கோரி, யூதர்கள் மற்றும் பிறர், அமெரிக்காவின் கேபிடல் கில்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீனியத்திற்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்?
இஸ்ரேலின் தாக்குதலால் பாதிப்படைந்துள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள், பாலஸ்தீனிய மக்களை அகதிகளாக ஏற்க மறுத்து வருகின்றனர்.
காஸாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புதல்- பைடன் தகவல்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு, வரையறுக்கப்பட்ட உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம்
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் நாட்டிற்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சென்றுள்ளார்.
இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இஸ்ரேலை அடைந்து, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூவைச் சந்தித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேல் குற்றம் சாட்டும் இஸ்லாமிய ஜிகாத் என்பது யார்?
நேற்று இரவு காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னால், பாலஸ்தீனத்தை சேர்ந்த இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் குற்றம்சாட்டி இருந்தார்.
500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்
12-வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இரு பக்கமும் இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுரங்கப்பாதைகளை வைத்து இஸ்ரேலுக்கு டிமிக்கி கொடுக்கும் ஹமாஸ்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்து வரும் போரினால் இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம்
பெங்களூரு எம்ஜி ரோடு மெட்ரோ அருகே நேற்று மாலை நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, பாலஸ்தீனத்தை ஆதரித்து போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: யார் பக்கம் யார்? அவர்களின் ராணுவ வளங்கள் என்ன?
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் உலகம் முழுவதிலிருந்து பலத்த கண்டனங்களை ஈர்த்து வருகிறது.
லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் விரிவடைய வாய்ப்பு
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மீது இஸ்ரேல் நேற்று ஒரே இரவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் மனிதாபிமான தேவைகளை கண்டறிவதற்காகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்வார் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.
'கருணை காட்ட வேண்டுமானால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியே வாருங்கள்': ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ஹமாஸ் பதுங்கும் இடங்களுக்கு எதிராக காசாவில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) தயாராகி வரும் நிலையில், இஸ்ரேலின் புலம்பெயர் விவகார அமைச்சர் அமிச்சாய் சிக்லி, ஹமாஸ் குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா: வெறுப்பினால் 6 வயது பாலஸ்தீன-முஸ்லீம் சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்
ஒரு ஆறு வயது முஸ்லீம் சிறுவன் அவனது வீட்டு உரிமையாளரால் 26 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர்: யாரிந்த யாஹ்யா சின்வார்?
இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலுக்கு பிறகு தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் 10 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், யாஹ்யா சின்வார் என்ற பெயர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளில் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் அரபு நாடுகள்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கில் பரவாமல் தடுக்கும் விஷயத்தில் அரபு நாடுகள் உறுதியாக இருக்கின்றன என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
காசாவை விட்டு வெளியேறிய 1 மில்லியன் மக்கள்: தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்
பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பித்ததில் இருந்து வடக்கு காசா பகுதியில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
'இஸ்ரேல் காசாவை கைப்பற்ற நினைப்பது பெரும் தவறு': அமெரிக்க அதிபர்
காசாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும், ஆனால் வருக்காலத்தில் பாலஸ்தீன தேசத்தை உருவாக்குவதற்கான வழி இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காசா மக்கள் வெளியேற 3 மணி நேர காலக்கெடு விதித்தது இஸ்ரேல்
காசா நகரம் மற்றும் வடக்கு காசாவில் வாழும் மக்கள் தெற்கு நோக்கி வெளியேற 'பாதுகாப்பான வழித்தடத்தை' திறந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படை, அந்த வழித்தட்டத்தில் 3 மணி நேரத்திற்கு தாக்குதில் நடத்தப்படாது என தெரிவித்துள்ளது.
'இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது': சீனா கண்டனம்
காசா மீது இஸ்ரேல் நடத்தி கொண்டிருக்கும் இராணுவ தாக்குதல், தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியுள்ளார்.
ஹமாஸ் தளபதி இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார்
கிப்புட்ஸ் நிரிம் கிராமத்தில் நடைபெற்ற படுகொலைக்கு காரணமான ஹமாஸ் தளபதி பிள்ளல் அல்- கெதிர, வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவ படையினர் தெரிவித்துள்ளனர்.