NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'கருணை காட்ட வேண்டுமானால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியே வாருங்கள்': ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    'கருணை காட்ட வேண்டுமானால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியே வாருங்கள்': ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
    இந்த போரினால் 4000க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    'கருணை காட்ட வேண்டுமானால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியே வாருங்கள்': ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Oct 16, 2023
    05:42 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹமாஸ் பதுங்கும் இடங்களுக்கு எதிராக காசாவில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) தயாராகி வரும் நிலையில், இஸ்ரேலின் புலம்பெயர் விவகார அமைச்சர் அமிச்சாய் சிக்லி, ஹமாஸ் குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஹமாஸ் போராளிகளுக்கு இஸ்ரேல் கருணை காட்ட வேண்டுமானால் அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பதுங்கு குழியில் இருந்து வெளியே வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம், நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,300க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றனர்.

    அதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல், காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் இலக்குகளை குண்டுவீசித் தாக்கி, குறைந்தது 900 குழந்தைகள் உட்பட 2600 பேரைக் கொன்றது.

    ட்ஜவும்

     4000க்கும் மேற்பட்டவர்கள் பலி 

    இதனையடுத்து, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸுக்கும் இடையே பெரும் போர் வெடித்தது.

    இந்த போரினால் 4000க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், "ஹமாஸ் போராளிகளுக்கு எனது பரிந்துரை என்னவென்றால், உங்கள் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு, உங்கள் கைகளை உயர்த்தி, பதுங்குகுழியில் இருந்து வெளியே வாருங்கள், அப்படி செய்தால் ஒருவேளை உங்களுக்கு கருணை கிடைக்கலாம்" என்று இஸ்ரேலின் புலம்பெயர் விவகார அமைச்சர் அமிச்சாய் சிக்லி ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

    தற்போதைய நிலவரப்படி, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) மற்றும் இஸ்ரேலிய விமானப்படை(IAF) ஆகிய படைகளை சேர்ந்த 400,000 க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரை காசா பகுதிக்கு வெளியே இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இஸ்ரேல்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இன்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் அமெரிக்கா
    இஸ்ரேல் போர் எதிரொலி- நாடு திரும்பும் விடாமுயற்சி படக்குழு தமிழ் திரைப்படம்
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான்  பாகிஸ்தான்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    "இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி இந்தியா
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர் இஸ்ரேல்
    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்
    அதிகரிக்கும் எதிர்ப்புகள்: இஸ்ரேல் போர் குறித்து காங்கிரஸ் கட்சி என்ன கூறியது? காங்கிரஸ்

    ஹமாஸ்

    பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள்.. கொதித்தெழுந்த சமூக வலைத்தளவாசிகள்! இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி  இஸ்ரேல்
    "ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம் இஸ்ரேல்
    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் தீவிரவாதிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025