NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசா பகுதியில் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசா பகுதியில் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல் 
    ஹமாஸ் படையினர் 222 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து சென்றனர்.

    காசா பகுதியில் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 23, 2023
    04:00 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹமாஸ் போராளிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக ஒரே இரவில் காசா பகுதிக்குள் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலை தாக்குவதற்காக ஹமாஸ் குழுக்கள் கூடியிருந்த இடங்களை அழிக்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளது.

    இஸ்ரேல் நாட்டின் தரைப்படை காசாவிற்குள் சில தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலின் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார்.

    "கவச மற்றும் காலாட்படை" பட்டாலியன்களால் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "இரவில் டாங்கிகள் மற்றும் காலாட்படைகள் மூலம் தாக்குதல்கள் நடந்தன. இந்த தாக்குதல்கள் அடுத்த கட்ட போருக்கு தயாராகி வரும் பயங்கரவாதிகளின் படைகளை கொல்லும் நோக்கில் நடத்தப்பட்டது." என்று டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார்.

    பிசிஜிசாட் 

    ஹமாஸ் குழுவிடம் சிக்கி இருக்கும் 222 இஸ்ரேலியர்கள் 

    காணாமல் போன பிணையக்கைதிகள் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க இஸ்ரேலிய படைகள் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் உள்ள நகரங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர் 222 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து சென்றனர்.

    இதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனியப் பகுதியை இரண்டு வாரங்களுக்கும் மேலாக வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து வருகிறது. மேலும், தரைவழித் தாக்குதலுக்காக காசா எல்லையில் தனது இராணுவத்தையும் நிறுத்தி வைத்துள்ளது.

    இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டனின் தலைவர்கள் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்கு தங்கள் ஆதரவை ஒரு கூட்டறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனம்
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இஸ்ரேல்

    இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்- அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஆபரேஷன் அஜய்: 274 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது நான்காவது விமானம் டெல்லி
    ஹமாஸ் தளபதி இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது': சீனா கண்டனம்  சீனா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா மக்கள் வெளியேற 3 மணி நேர காலக்கெடு விதித்தது  இஸ்ரேல்  இஸ்ரேல்
    'இஸ்ரேல் காசாவை கைப்பற்ற நினைப்பது பெரும் தவறு': அமெரிக்க அதிபர்  அமெரிக்கா
    காசாவை விட்டு வெளியேறிய 1 மில்லியன் மக்கள்: தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் இஸ்ரேல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளில் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் அரபு நாடுகள்  இஸ்ரேல்

    பாலஸ்தீனம்

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு  இஸ்ரேல்
    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    உலகம்

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர் இஸ்ரேல்
    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்
    இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பை உயர்த்திய சர்வதேச நாணய நிதியம் இந்தியா
    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025