NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது': சீனா கண்டனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது': சீனா கண்டனம் 
    சீனத் தூதர் ஜாய் ஜுன் அடுத்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்.

    'இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது': சீனா கண்டனம் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 15, 2023
    02:38 pm

    செய்தி முன்னோட்டம்

    காசா மீது இஸ்ரேல் நடத்தி கொண்டிருக்கும் இராணுவ தாக்குதல், தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியுள்ளார்.

    காசா மக்களுக்கு இஸ்ரேல் வழங்கி கொண்டிருக்கும் கூட்டுத் தண்டனையை இஸ்ரேலிய அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஒரு பெரிய போராக மாறுவதை தடுப்பதற்கு சீனாவின் ஒத்துழைப்பைக் கோரி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் நேற்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ-யை தொடர்புகொண்டு பேசினார்.

    இந்நிலையில், தற்போது அமைச்சர் வாங் யீ இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    சவுதி அரேபிய இளவரசர் பைசல் பின் ஃபர்ஹாத்துடன் தொலைபேசியில் பேசும் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்ததாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

    க்கல்ஸ் 

    அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது சீனா 

    "அனைத்து தரப்பினரும் நிலைமையை மோசமாக்கும் அளவுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அவர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று வாங் யீ சவுதி அரேபிய இளவரசரும் வெளியுறவு அமைச்சருமான பைசல் பின் ஃபர்ஹாத்திடம் தெரிவித்திருக்கிறார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டுவர போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக சீனத் தூதர் ஜாய் ஜுன் அடுத்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்.

    இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைத் தீர்ப்பதற்கான சரியான வழி இரு நாடுகளுக்கும் இடையே கூடிய விரைவில் அமைதிப் பேச்சுக்களை தொடங்குவதாகும் என்று அமைச்சர் வாங் யீ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சீனா

    புதிய 'மிக்ஸ் ஃபோல்டு 3' ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது ஷாவ்மி ஸ்மார்ட்போன்
    இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி  இலங்கை
    புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களின் பெயர்களை இந்தியாவில் பதிவு செய்திருக்கும் BYD எலக்ட்ரிக் கார்
    பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு  இந்தியா

    இஸ்ரேல்

    இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரானின் திட்டமிட்ட சதியா? ஈரான்
    'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்  கேரளா
    "இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி இந்தியா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இஸ்ரேல்
    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா
    பணயக்கைதிகளைக் கொல்லப் போவதாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது ஹமாஸ் இஸ்ரேல்

    பாலஸ்தீனம்

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு  இஸ்ரேல்
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர் இஸ்ரேல்
    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025