NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?
    காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் இதுவரை 3,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?

    எழுதியவர் Srinath r
    Oct 19, 2023
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது முதல் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரின் விளைவாக, அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

    கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த "ஆபிரகாம் ஒப்பந்தங்கள்" முதல் வேகம் எடுத்த பேச்சுவார்த்தை, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பின் தலைகீழாக மாறியது.

    இந்த போரின் விளைவாக, சவுதி அரேபியா முதல் நாடாக, பேச்சுவார்த்தையை இடை நிறுத்தியது.

    குறைந்தது 470க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த காஸா மருத்துவமனை தாக்குதலை, இஸ்ரேல் நடத்தவில்லை என அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.

    அதே சமயம், அரபு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவை இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ளன.

    2nd card

     'தி நக்பா'- பேரழிவு

    பாலஸ்தீனீர்கள் மற்றும் அரபு நாடுகள் இடையேயான போர், அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின், தொடங்கியது அல்ல.

    கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் இப்போரில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பல லட்சக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.

    இதை பாலஸ்தீன மக்கள் 'நக்பா' அல்லது பேரழிவு என அழைக்கிறார்கள்.

    3rd card

    1948 ஆம் ஆண்டு நடந்த பாலஸ்தீன போர்

    1948 ஆண்டு நடைபெற்ற போர், அரபு நாடுகளுக்கும் புதிதாக சுதந்திரம் பெற்ற இஸ்ரேலுக்கும் இடையிலான முதல் மோதலாகும். மே 14, 1948 இல் இஸ்ரேல் தனது சுதந்திரத்தை அறிவித்தது.

    பாலஸ்தீனத்திற்கான ஐக்கிய நாடுகளின் பிரிவினை முன்மொழிவுக்குப் பிறகு, அதுவரை பாலஸ்தீனத்தில் உள்நாட்டு போராக இருந்தது, இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான போராக மாறியது.

    எகிப்து, ஈராக், ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியா ஆகிய 5 அரபு நாடுகளின் இராணுவக் கூட்டணி பாலஸ்தீனத்திற்குள் நுழைந்தது.

    அது பாலஸ்தீன மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் நிரந்தர இடம்பெயர்வுடன் முடிந்தது.

    பாலஸ்தீனத்துக்கென ஐநா முன்மொழிந்த கிட்டத்தட்ட 60% மேலான நிலப்பரப்பை, தற்போது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    4th card

    தொடர்ந்த இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான மோதல்

    1949 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளிடையே உறவு சுமூகமாக இல்லை.

    பின்னர் 1956 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூயஸ் நெருக்கடிக்கு பின் மீண்டும் மோசம் அடைந்தது.

    மே மாதம் 1967 ஆம் ஆண்டில், டிரான் ஜலசந்தியில் இஸ்ரேல் நாட்டு கப்பல்களுக்கு எகிப்து அனுமதி மறுத்தது. இதுவே ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் போர் மூல காரணமானது.

    ஆறு நாட்கள் நடந்த போரின் விளைவாக எகிப்து தன் வசம் இருந்த காஸா பகுதியையும், சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேலிடம் இழந்தது.

    எகிப்துக்கு ஆதரவாக போர் புரிந்த ஜோடான், சிரியா ஆகிய நாடுகளும் தங்கள் நிலப்பரப்பை இஸ்ரேலிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

    5th card

    அரபு தேசியவாதம்

    இஸ்ரேலுக்கு எதிரான தொடர் போரில், பாலஸ்தீனம் மட்டுமல்லாது, அரபு நாடுகளும் தங்களது நிலப்பரப்பை தொடர்ந்து இழந்து வந்தனர்.

    இது அரபு மக்களின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியது. இதுவே அரபு தேசியவாதம் 1950 மற்றும் 60களில் உச்சம் தொடகாரணமானது.

    மேலும் இஸ்ரேல் உடனான சமாதான பேச்சுவார்த்தை அல்லது சுகந்திர பாலஸ்தீனம் குறித்து பேசிய பிரபலமானவர்கள் தொடர்ந்து கொள்ளப்பட்டு வந்தனர்.

    ஜூலை மாதம் 20 ஆம் தேதி 1951 ஆம் ஆண்டு, ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் ஜோர்டானின் மன்னர் ஒன்றாம் அப்துல்லா, இஸ்ரேலுடன் சகிப்புத்தன்மையாக இருந்ததற்காக பாலஸ்தீனியரால் கொல்லப்பட்டார்.

    எகிப்து மன்னர் அன்வர் சதாத், இஸ்ரேலின் அமைதி ஒப்பந்தத்தை ஆதரித்ததற்காக 1981 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.

    6th card

    அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் புனித ஸ்தலங்கள்

    அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைய, மதம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமாக கருதப்படும் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி உள்ளிட்ட பல இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான உறவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த "ஆபிரகாம் ஒப்பந்தங்கள்" திருப்புணையாக பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில், இஸ்ரேல், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை தனித்து இயல்பு நிலை திரும்ப முக்கிய காரணமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சவுதி அரேபியா
    குடியரசு தலைவர்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இஸ்ரேல்

    'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் இன்று மதியம் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    24 மணிநேர கெடு: 11 லட்சம் காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு ஐநா சபை

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள்.. கொதித்தெழுந்த சமூக வலைத்தளவாசிகள்! ஹமாஸ்
    இஸ்ரேல்-பாலஸ்தீனம் குறித்த உள்ளடக்கங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த எக்ஸ் எக்ஸ்
    இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் அச்சம்; உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்தியா விலகல் செஸ் போட்டி
    இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத உயிர்களை காவு வாங்கும் -ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யா

    சவுதி அரேபியா

    ரஷ்ய-உக்ரைன் போர்: சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை ரஷ்யா
    சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்? இந்தியா
    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து இஸ்ரேல்

    குடியரசு தலைவர்

    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி மு.க ஸ்டாலின்
    அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு  தமிழ்நாடு
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை ஜி20 மாநாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025