NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர்
    இளவரசர் துர்கி அல் பைசல், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கான முன்னாள் சவுதி தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர்

    எழுதியவர் Srinath r
    Oct 22, 2023
    01:13 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போருக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேலை கடுமையாக கண்டித்து பேசிய சவுதி இளவரசர் துர்கி அல் பைசல், இந்தியா சுதந்திரத்திற்கு போராடிய முறை தான் சரியானது என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் பேக்கர் பல்கலைக்கழகத்தில் பேசிய அல் பைசல், "இந்தப் போரில் கதாநாயகர்கள் யாரும் இல்லை, பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளனர்" என்றவர், ஆங்கில ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் ஒத்துழையாமை இயக்கத்தை சுட்டிக்காட்டினார்.

    "பாலஸ்தீனத்தில் ராணுவத்தை பிரயோகப்படுத்துவதை நான் ஆதரிக்கவில்லை. உள்நாட்டு கிளர்ச்சி மற்றும் கீழ்ப்படியாமை தான் போராடுவதற்கு சரியான வழி. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும், கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் பேரரசும் அதனால் தான் வீழ்ந்தது" என்று அவர் கூறியுள்ளார்.

    2nd card 

    ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேலுக்கு இன அழிப்பில் ஈடுபட வாய்ப்பு அளித்து விட்டது- சவுதி இளவரசர்

    அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை கடுமையாக கண்டித்த பைசல், "ஹமாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது போல, அப்பாவி பொதுமக்களை அவர்கள் இலக்காக்குவதை நான் திட்டவட்டமாக கண்டிக்கிறேன்."

    "இத்தகைய தாக்குதல்கள் இஸ்லாமிய அடையாளத்திற்கான ஹமாஸின் கூற்றுக்களை பொய்யாக்குகிறது." என பேசினார்.

    மேலும் அவர் ஹமாஸ் தாக்குதல், இஸ்ரேலுக்கு இன அழிப்பில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி விட்டதாக விமர்சித்தார்.

    இருந்த போதும் காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் குறித்து வெளிப்படையாக சவுதி இளவரசர் கண்டிக்கவில்லை.

    அதேசமயம் இஸ்ரேல், பாலஸ்தீனியர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

    3rd card

    மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடிய சவுதி இளவரசர்

    மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடிய இளவரசர், அவர்கள் இஸ்ரேலில் மக்கள் கொல்லப்படும் போது மட்டும் கண்ணீர் வடிப்பதாகவும், பாலஸ்தீனர்கள் கொல்லப்படும் போது, அவர்கள் துக்கத்தைக் கூட வெளிப்படுத்த மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

    காசாவில் பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவது குறித்து பேசியவர், "ரத்தம் சிந்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

    'அல் முகபாரத் அல் அம்மா' என்ற புலனாய்வு நிறுவனத்தை 24 ஆண்டுகளாக அல் பைசல் நடத்தி வந்தார்.

    அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சவுதி அரேபியாவின் தூதராகவும் பணியாற்றியுள்ள அல் பைசல், தற்போது எந்த விதமான அதிகாரப்பூர்வ பொறுப்புகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹமாஸ்
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இந்தியா

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    ஹமாஸ்

    பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள்.. கொதித்தெழுந்த சமூக வலைத்தளவாசிகள்! இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி  இஸ்ரேல்
    "ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம் இஸ்ரேல்
    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்

    இஸ்ரேல்

    'ஆப்ரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய 28 தமிழர்கள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த போவதை முன்பே கணித்த அமெரிக்க உளவுத்துறை  அமெரிக்கா
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்லாமிய தாக்குதல்: 7000 வீரர்களை கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துகிறது பிரான்ஸ்  பிரான்ஸ்
    இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்- அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல்
    ஆபரேஷன் அஜய்: 274 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது நான்காவது விமானம் டெல்லி
    ஹமாஸ் தளபதி இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார் இஸ்ரேல்

    இந்தியா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்  டெல்லி
    இந்தியாவில் புதிதாக எலக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக கியா நிறுவனம் அறிவிப்பு எலக்ட்ரிக் கார்
    ஒரே பாலின திருமணம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா? இன்னும் 5 நாட்களுக்குள் தீர்ப்பு  உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025