NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காஸாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புதல்- பைடன் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஸாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புதல்- பைடன் தகவல்
    அமெரிக்க அதிபரின் இஸ்ரேல் பயணம் சுமார் 8 மணி நேரம் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    காஸாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புதல்- பைடன் தகவல்

    எழுதியவர் Srinath r
    Oct 19, 2023
    10:04 am

    செய்தி முன்னோட்டம்

    போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு, வரையறுக்கப்பட்ட உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    தனது இஸ்ரேல் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பும் முன், எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி உடன் தொலைபேசியில் பைடன் உரையாடினார்.

    அதில் எகிப்து ஜனாதிபதி, 'ரஃபா எல்லை' வழியாக 20 லாரிகளில் நிவாரண உதவிகளை கொண்டு செல்ல ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    'ரஃபா எல்லை' காஸா, எகிப்துடன் கொண்டுள்ள தரைவழி எல்லை பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனியம் போர் தொடங்கும் முன், நாள் ஒன்றுக்கு 400 காஸா மக்கள் 'ரஃபா எல்லை' வழியாக எகிப்துக்குள் செல்ல முடியும்.

    போர் தொடங்கிய பின் இந்த எல்லையை எகிப்து மூடியது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    இஸ்ரேல் பதில்தாக்குதல் நடத்துவதற்கு உரிமை உள்ளது- பைடன்

    அமெரிக்க அதிபர் பைடன் நேற்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து தனது ஆதரவை பதிவு செய்தார்.

    பின் பேசிய பைடன், இஸ்ரேல் "மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால்", ஹமாஸ் அமைப்பு மீது தாக்குதல் நடத்த அதற்கு உரிமை உண்டு என கூறினார்.

    காஸாவின் அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் மறுத்துள்ள நிலையில், அதை அமெரிக்க அதிபரும் உறுதிப்படுத்தினார்.

    இந்த தாக்குதலில் 470-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால் இஸ்ரேல் ஒரு டஜனுக்கும் குறைவான மக்களே இதில் உயிரிழந்ததாக கூறியுள்ளது.

    அதேசமயம், மருத்துவமனை மீதான தாக்குதல் தன்னை "ஆழ்ந்த வருத்தமும் சீற்றமும்" அடையச்செய்துள்ளதாக பைடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    பாலஸ்தீனியர்களுக்கு நிவாரண நிதி அறிவித்த பைடன்

    அமெரிக்க அதிபர் பைடன், போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

    இது தொடர்பான விஷயங்களை நன்கு அறிந்தவர், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை இடம் அளித்த தகவலின் படி, அமெரிக்க அதிபர் வெள்ளிக்கிழமைக்குள் 10 பில்லியன் டாலர்களை இஸ்ரேலுக்கு வழங்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

    கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின், பாலஸ்தீனிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜோ பைடன்
    அமெரிக்கா
    குடியரசு தலைவர்
    இஸ்ரேல்

    சமீபத்திய

    செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியமான உணவு
    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு

    ஜோ பைடன்

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல் உலகம்
    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  அமெரிக்கா
    ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு  இந்தியா

    அமெரிக்கா

    IoT மற்றும் சைபர் பாதுகாப்பு வணிகங்களைப் பிரிக்கும் பிளாக்பெர்ரி, ஏன்? வணிகம்
    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் இங்கிலாந்து
    நிலநடுக்கத்தைக் கண்டறியும் AI வழிமுறையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு
    ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்கா  ரஷ்யா

    குடியரசு தலைவர்

    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி மு.க ஸ்டாலின்
    அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு  தமிழ்நாடு
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை ஜி20 மாநாடு

    இஸ்ரேல்

    டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் இஸ்ரேலில் இலவசம்.. எலான் மஸ்க் அறிவிப்பு! எலான் மஸ்க்
    நாஜி வதை முகாம்களுக்கு தனது வம்சாவளியினரை அழைத்து சென்ற அமெரிக்கா அதிபர் பைடன் அமெரிக்கா
    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் கார்
    'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025