NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாலஸ்தீனியத்திற்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலஸ்தீனியத்திற்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்?
    காஸா- எகிப்து இடையேயான 'ரஃபா எல்லைப்' பகுதி. போர் தொடங்கும் முன் இந்த எல்லை வழியாக பாலஸ்தீனியர்கள் எகிப்துக்குள் சென்றுவ.ர எகிப்து அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    பாலஸ்தீனியத்திற்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்?

    எழுதியவர் Srinath r
    Oct 19, 2023
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலின் தாக்குதலால் பாதிப்படைந்துள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள், பாலஸ்தீனிய மக்களை அகதிகளாக ஏற்க மறுத்து வருகின்றனர்.

    காஸாவின் இரு எல்லைகளில் இருக்கும் நாடுகளான ஜோர்டான் மற்றும் எகிப்து, அகதிகளை ஏற்றுக்கொள்ள திட்டவட்டமாக மறுத்துள்ளன.

    இது குறித்து பேசிய எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா,

    "இஸ்ரேல், காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக மட்டும் போரை நடத்தவில்லை, அங்கு வாழும் மக்களை அகதிகளாக எகிப்துக்கு வெளியேற்ற போர் செய்து வருகிறது" என குற்றம் சாட்டியிருந்தார்.

    ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா செவ்வாய்க்கிழமை அன்று, "ஜோர்டானில் அகதிகளுக்கு அனுமதி இல்லை, எகிப்திலும் அகதிகளுக்கு அனுமதி இல்லை" என்று கூறியிருந்தார்.

    அதேபோல் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் எந்த நாடுகளும் அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை.

    2nd card

    மக்கள் இடம் பெயர்ந்ததின் வரலாறு

    பாலஸ்தீனத்தில் மக்கள் இடம்பெயர்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவானபோது, தற்போது இஸ்ரேலாக இருக்கும் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்தனர்.

    கடந்த 1967ஆம் ஆண்டு நடந்த 'மத்திய கிழக்கு' போரின்போது, இஸ்ரேல் மேற்கு கரையையும், காஸாவையும் கைப்பற்றியது.

    அங்கிருந்த சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறினர். அதில் பெரும்பாலான மக்கள் ஜோர்டானில் குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    1948 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின், அகதிகளாக சென்ற பாலஸ்தீனர்கள் நாடு திரும்ப இஸ்ரேல் மறுத்துவிட்டது. அது அந்நாட்டின் பெரும்பான்மையான யூத மக்களை அச்சுறுத்தும் என இஸ்ரேல் வாதிட்டது.

    தற்போது இந்த வரலாறு மீண்டும் திரும்பும் என எகிப்து அஞ்சுகிறது.

    3rd card

    மக்கள் திரும்பிச் செல்ல உத்தரவாதம் இல்லை

    பத்து நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் இயக்கத்தை முற்றிலுமாக அழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    இது இந்த போர் எப்போது, எவ்வாறு முடிவடையும் என்ற தெளிவில்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

    மேலும் காஸாவை ஆண்டு வரும் ஹமாஸ் அமைப்பு ஒழிக்கப்பட்டால், காஸாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது இஸ்ரேல் மீண்டும் காஸாவை ஆக்கிரமிக்க வழிவகுத்து, மேலும் மோதல்களை உண்டாக்கும் என அஞ்சப்படுகிறது.

    வடக்கு காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையின் உத்தரவை அடுத்து தெற்கு நோக்கி வெளியேறிய காஸா மக்கள், மீண்டும் அவர்களது பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலின் இந்த வாக்குறுதியை, எகிப்து ஜனாதிபதி நம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    4rd cad

    எகிப்தில் நிரம்பி வழியும் அகதிகள்

    இஸ்ரேலின் பாலஸ்தீனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை, எகிப்து தொடர்ந்து சந்தேகித்தும், எச்சரித்தும் வருகிறது.

    இஸ்ரேல், இந்த போரின் மூலம், அந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான கோரிக்கையான தனி பாலஸ்தீன கோரிக்கையை அழிக்க பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும் இது குறித்து பேசிய எகிப்து ஜனாதிபதி, ராணுவம் இல்லாத சுதந்திரமான பாலஸ்தீனியம், பேச்சு வார்த்தைகளின் மூலம் முன்னரே உருவாக்கப்பட்டிருந்தால் இந்த போருக்கு தேவை இருந்திருக்காது எனக்கூறியுள்ளார்.

    ஏற்கனவே அகதிகளால் நிரம்பிவழியும் எகிப்து, இந்த போரால் மேலும் அகதிகள் வருவார்கள் என அஞ்சுகிறது.

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள எகிப்தில், தற்போது 9 லட்சம் அகதிகள் உள்ளனர். இதில் 3 லட்சம் பேர் இந்த ஆண்டு சூடானிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    5th card

    அகதிகளுடன் ஆயுத குழுவினரும் வரலாம் என அஞ்சும் எகிப்து

    காசாவில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறும் போது, அவர்களுடன் ஹமாஸ் அல்லது வேறு தீவிரவாத அமைப்புகள் வெளியேறி தங்கள் நாட்டுக்குள் ஊடுருவலாம் என எகிப்து அஞ்சுகிறது.

    கடந்த 2007 ஆம் ஆண்டு காசாவை ஹமாஸ் கையகப்படுத்தியது முதல், அதன் எல்லைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது எகிப்து.

    மேலும் எகிப்து- காஸா பகுதியை இணைக்கும் பல சுரங்கங்களையும் அது துண்டித்தது.

    இந்நிலையில், காஸா மக்களை எகிப்துக்குள் அனுமதித்ததால், ஹமாஸ் அல்லது வேறு ஆயுத குழுக்கள், எகிப்தில் இருந்தபடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என கருதுகிறது எகிப்து.

    இது எகிப்து- இஸ்ரேலிடையே 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் அமைதி ஒப்பந்தத்தை சிதைத்து விடும் என எகிப்து கூறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹமாஸ்
    ஜோர்டான்
    பிரதமர்
    இஸ்ரேல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஹமாஸ்

    பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள்.. கொதித்தெழுந்த சமூக வலைத்தளவாசிகள்! இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி  இஸ்ரேல்
    "ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம் இஸ்ரேல்
    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்

    ஜோர்டான்

    இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து இஸ்ரேல்

    பிரதமர்

    ரபேல் ஜெட், பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களை மையப்படுத்தி பிரான்ஸ் நாட்டிற்கு பயணப்பட்டார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான் 3
    105 மதிப்புமிக்க தொல்பொருட்களை இந்தியாவிடம் திருப்பி கொடுத்தது அமெரிக்கா அமெரிக்கா
    மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம்  பாஜக

    இஸ்ரேல்

    டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் இஸ்ரேலில் இலவசம்.. எலான் மஸ்க் அறிவிப்பு! எலான் மஸ்க்
    நாஜி வதை முகாம்களுக்கு தனது வம்சாவளியினரை அழைத்து சென்ற அமெரிக்கா அதிபர் பைடன் அமெரிக்கா
    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் கார்
    'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025