இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர்
நாகர்கோவில் மாவட்டத்தில் கொரோனா பயம் காரணமாக ஒரு குடும்பத்தினர் 2 ஆண்டுகள் தங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்துள்ள விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து: மத்தியப் பிரதேசத்தில் 22 பேர் பலி
மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் உள்ள ஒரு பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விழுந்ததால் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது
தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
இந்தியாவில் தங்களுடை முதல் ஏசி தொழிற்சாலையை சென்னையில் அமைக்கவிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி எலெக்ட்ரிக்.
டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் - இருவரும் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு
ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் நேற்று(மே.,8)அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 1,331 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-8) 1,839ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,331 ஆக குறைந்துள்ளது.
தேர்தலுக்கு முன் கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்
கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்
தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் அருகே மருதூர் வட்டம் பகுதியின் அருகேயுள்ள வில்லிய வரம்பல் கோயில் கோபுரத்தின் மீது இளைஞர் ஒருவர் ஏற முயன்று தவறி விழுந்து உயிரிழந்தார்.
கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள்
1978 மற்றும் 2018க்கு இடைப்பட்ட 40 ஆண்டுகளில், கர்நாடக சட்டசபைக்கு 62 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை
தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும்மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள்.
மே 12ஆம் தேதிக்குள் 'மோக்கா' புயல் தீவிர புயலாக மாறக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் உருவாகும் மோக்கா புயல், வரும் வெள்ளிக்கிழமைக்குள் மிகக் கடுமையான புயலாகத் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2027-ம் ஆண்டு முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பரிந்துரைக்கும் மத்திய அமைச்சகம்!
2027-ம் ஆண்டு முதல் 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட மற்றும் அதிகம் மாசடைந்த நகரங்களில் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் எண்ணெய் வளத்துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்
தமிழ்நாடு மாநிலம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியினை மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல அடுக்கு பாதுகாப்பினை மீறி கோயிலுக்குள் செல்போன் கொண்டு சென்று ஒரு பக்தர் வீடியோ எடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்தார் மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, "வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்காக" சர்ச்சைக்குரிய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைத் தடை செய்துள்ளது.
எந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சியினை பிடிக்கும்?-ஜோதிடருக்கு பரிசுத்தொகை அறிவித்த மருத்துவர்
கர்நாடகா சட்டசபை தேர்தல் குறித்து பல தரப்பில் இருந்து கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் நாளை முதல் மீன்பிடிக்க செல்லலாம் - மீன்வளத்துறை
கடலில் உள்ள உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க மத்திய அரசு ஆண்டுதோறும் தடை விதிக்கிறது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று(மே-8) காலை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வரும் 10ஆம் தேதி அன்று, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இது புயலாக வலுப்பெற கூடும். இதனையடுத்து, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்: DGCA நோட்டீஸ்
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA, டிக்கெட்டுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 'கோ ஃபர்ஸ்ட்' விமான சேவை நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
தமிழ்நாடு மாநிலம் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று(மே.,8) வெளியானது.
சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக
காங்கிரஸ் மற்றும் அதன் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடிதம் எழுதியுள்ளது.
பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி
கர்நாடகா மாநிலத்தில் வரும் 10ம்தேதி 224 தொகுதிகளை கொண்ட சட்டசபைத்தேர்தல் நடக்கவுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி
தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட மூன்று FIRகளையும் இணைக்கக் கோரிய யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று(மே 8) தள்ளுபடி செய்தது.
திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்
திகார் சிறையில் தில்லு தாஜ்பூரியா குத்திக் கொல்லப்பட்ட போது, அங்கு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக் காவலர்கள்(TNSP) 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில் இருக்கிறதா? தெரிந்து கொள்வது எப்படி!
இந்தியாவில் அரசு சேவைகளைப் பெற நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அடையாள அட்டையை வழங்கியது இந்திய அரசு.
இந்தியாவில் ஒரே நாளில் 1,839 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-7) 2,380ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,839 ஆக குறைந்துள்ளது.
ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி
தமிழ்நாடு மாநிலத்தின் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று(மே.,8) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்
குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயமானதாக தேசிய குற்ற ஆவண காப்பகம்(என்.சி.ஆர்.பி.) தெரிவித்துள்ளது.
இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தால் பரபரப்பு
கடந்த வாரம் இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் போயிங் 777 ஜெட்லைனர் விமானத்தால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டது.
அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு
பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு அருகிலுள்ள ஹெரிடேஜ் தெருவில் இன்று(மே 8) காலை இரண்டாவது குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி
ராஜஸ்தானில் உள்ள ஒரு வீட்டின் மீது விமானப்படையின் MIG-21 போர் விமானம் மோதியதால் 3 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு துவக்கம்
தமிழக அரசு கண்காணிப்பில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 1,547 அரசு, அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் அறிவியல்-கலை கல்லூரிகள் இயங்கி வருகிறது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - தமிழக அரசு
தமிழ்நாடு மாநிலத்தில் அங்கவன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறையாக 15 நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
"இந்தியா முன்னோடியாகத் திகழ வேண்டும்".. ICANN சிஇஓ சாலி காஸ்டெர்டன்!
Universal Acceptance-ல் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா செயல்பட வேண்டும் என ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) அமைப்பின் இடைக்கால சிஇஓ சாலி காஸ்டெர்டன் தெரிவித்துள்ளார்.
கடுமையான வெப்ப அலைகளின் தாக்கம் மேலும் உயரும்: நிபுணர்கள்
இந்தியாவில் கடுமையான வெப்ப அலைகள் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நேற்று(மே 7) மாலை கடற்கரை அருகே இரட்டை அடுக்கு படகு கவிழ்ந்து மூழ்கியதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உயரமான மலைகளின் மடியில் அமைந்துள்ள செழிப்பான வயல்வெளிகள், ஆற்றின் நீரோடைகள் மற்றும் காட்டுப் பாதைகளுக்கு மத்தியில் கேரன் என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது.
ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.
வருமான வரி ஏய்ப்பு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
வருமான வரித் தாக்கலின் போது வருமான வரி கட்டாமல் விட்டாலோ அல்லது பாக்கி வைத்திருந்தாலோ அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒருவர் வருமானத்தை குறைத்துக் காட்டினாலும் வருமான வரித்துறை நம் மீது நடவடிக்கை எடுக்கும்.
பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்திக்கு தடை
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகர்கோயிலில் தைப்பூசம்,கந்தசஷ்டி,நவராத்திரி திருவிழா,பங்குனி உத்திரம் போன்ற பாரம்பரிய திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.