NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார் 
    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார் 
    இந்தியா

    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார் 

    எழுதியவர் Nivetha P
    May 09, 2023 | 11:50 am 0 நிமிட வாசிப்பு
    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார் 
    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்

    தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் அருகே மருதூர் வட்டம் பகுதியின் அருகேயுள்ள வில்லிய வரம்பல் கோயில் கோபுரத்தின் மீது இளைஞர் ஒருவர் ஏற முயன்று தவறி விழுந்து உயிரிழந்தார். திருநாகேஸ்வர பகுதியினை சேர்ந்தவர் மோகன், இவருடைய மகன் தமிழ்வளவன்(28). இவர் வில்லிய வரம்பல் மகா மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்து வரும் திருவிழாவினை காண அந்த ஊருக்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்த கோயில் திருவிழாவில் நேற்று(மே.,8) இரவு அம்மன் புறப்பாடு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்வின் போது வான வேடிக்கையும் நடத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    சிற்பத்தின் மீது ஏறியவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் 

    இந்நிலையில் அந்த வான வேடிக்கையினை பார்ப்பதற்காக கோயிலின் மேல் பகுதியில் உள்ள கோபுரம் அருகே செல்ல கோயில் சுற்றுச்சுவர் பகுதியிலிருந்த சிங்க சிற்பத்தின் மீது தமிழ்வளவன் ஏறியுள்ளார். அப்போது அந்த சிற்பம் உடைந்த நிலையில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த தமிழ்வளவனை அருகில் இருந்தோர் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார்கள். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்கள். தொடர்ந்து, இது குறித்து தகவலறிந்த நாச்சியார் கோயில் ஆய்வாளர் கே.ரேகா ராணி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    திருவிழா
    அரசு மருத்துவமனை

    தமிழ்நாடு

    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை என்ஐஏ
    மே 12ஆம் தேதிக்குள் 'மோக்கா' புயல் தீவிர புயலாக மாறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்  ஊட்டி
    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை  புதுச்சேரி

    திருவிழா

    பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்திக்கு தடை  திண்டுக்கல்
    புத்த பூர்ணிமா: இந்த புத்த பண்டிகை நாளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பண்டிகை
    மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண பிரம்மோற்சவம்  மதுரை
    தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் - திரளாக திரண்ட பக்தர்கள்  தஞ்சை பெரிய கோவில்

    அரசு மருத்துவமனை

    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன்  தமிழ்நாடு
    கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம்  கோவை
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023