NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார் 
    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்

    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார் 

    எழுதியவர் Nivetha P
    May 09, 2023
    11:50 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் அருகே மருதூர் வட்டம் பகுதியின் அருகேயுள்ள வில்லிய வரம்பல் கோயில் கோபுரத்தின் மீது இளைஞர் ஒருவர் ஏற முயன்று தவறி விழுந்து உயிரிழந்தார்.

    திருநாகேஸ்வர பகுதியினை சேர்ந்தவர் மோகன், இவருடைய மகன் தமிழ்வளவன்(28).

    இவர் வில்லிய வரம்பல் மகா மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்து வரும் திருவிழாவினை காண அந்த ஊருக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    அந்த கோயில் திருவிழாவில் நேற்று(மே.,8) இரவு அம்மன் புறப்பாடு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

    அந்த நிகழ்வின் போது வான வேடிக்கையும் நடத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    கோயில் 

    சிற்பத்தின் மீது ஏறியவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் 

    இந்நிலையில் அந்த வான வேடிக்கையினை பார்ப்பதற்காக கோயிலின் மேல் பகுதியில் உள்ள கோபுரம் அருகே செல்ல கோயில் சுற்றுச்சுவர் பகுதியிலிருந்த சிங்க சிற்பத்தின் மீது தமிழ்வளவன் ஏறியுள்ளார்.

    அப்போது அந்த சிற்பம் உடைந்த நிலையில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

    இதனையடுத்து படுகாயமடைந்த தமிழ்வளவனை அருகில் இருந்தோர் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார்கள்.

    அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்கள்.

    தொடர்ந்து, இது குறித்து தகவலறிந்த நாச்சியார் கோயில் ஆய்வாளர் கே.ரேகா ராணி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திருவிழா
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு

    தமிழ்நாடு

    புதுக்கோட்டையில் ஓய்வுபெற்ற உதவியாளர் - ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்  வைரல் செய்தி
    தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் - தமிழக அரசு தமிழக அரசு
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    திருவண்ணாமலை கோயிலில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம்  திருவண்ணாமலை

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  காவல்துறை
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025