NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "இந்தியா முன்னோடியாகத் திகழ வேண்டும்".. ICANN சிஇஓ சாலி காஸ்டெர்டன்!
    "இந்தியா முன்னோடியாகத் திகழ வேண்டும்".. ICANN சிஇஓ சாலி காஸ்டெர்டன்!
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    "இந்தியா முன்னோடியாகத் திகழ வேண்டும்".. ICANN சிஇஓ சாலி காஸ்டெர்டன்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 08, 2023
    11:16 am
    "இந்தியா முன்னோடியாகத் திகழ வேண்டும்".. ICANN சிஇஓ சாலி காஸ்டெர்டன்!
    ICANN இடைக்கால சிஇஓ சாலி காஸ்டெர்டன்

    Universal Acceptance-ல் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா செயல்பட வேண்டும் என ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) அமைப்பின் இடைக்கால சிஇஓ சாலி காஸ்டெர்டன் தெரிவித்துள்ளார். உலகளவில் அனைத்து மக்களுக்கும் இணையதளம் ஒரேமாதிரியானதாக இருக்க வேண்டும் எனவும், உலகின் அனைத்து மக்களும் இணையத்தைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும் உருவாக்கப்பட்ட அமைப்பே ICANN. தற்போது உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இணையத்துடன் உரையாட ஆங்கிலத்தையே பயன்படுத்துகிறார்கள். Domain Name-கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலே தான் இருக்கும். அப்படி இல்லாமல், அனைத்து மக்களும் தங்களுடைய தாய் மொழியில் அல்லது தங்களுக்கு விருப்பமான மொழியில் இணையத்தைப் பயன்படுத்துவதை, அதற்கேற்ற வகையில் இணையத்தை மாற்றியமைக்க முனைகிறது இந்த அமைப்பு.

    2/2

    முன்னோடியாக இந்தியா: 

    இந்தியாவில் டிஜிட்டலாக்கம் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. நிறைய மக்கள் இணையத்தோடு இணைந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார் சால் காஸ்டெர்டன். டொமைன் பெயர்களிலும் லத்தீன் எழுத்துப்படிவம் அல்லாத பிற எழுத்துப்படிவ மொழிகளைப் பயன்படுத்த IDN (Internationalised Domain Names) சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது ICANN. இதன் மூலம் ஆங்கிலம் மட்டுமல்லாது சீன, அரபிக், தேவனாகரி உள்ளிட்ட எழுத்துப்படிவ மொழிகளிலும் டொமைன் பெயரை பயன்படுத்த ICANN வழிவகை செய்கிறது. தற்போது '.in' என்ற டொமைன் பெயர் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக இதனை ஆங்கிலத்தில் இல்லாமல் ஹிந்தியில் உருவாக்க வேண்டும் என ICAAN அமைப்பின் குழுத்தலைவர் த்ரிப்தி சின்ஹா தெரிவித்துள்ளார். இது போன்ற மாற்றங்களை முன்னெடுக்க இந்தியா சிறப்பான களமாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா

    இந்தியா

    கடுமையான வெப்ப அலைகளின் தாக்கம் மேலும் உயரும்: நிபுணர்கள் பாகிஸ்தான்
    கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி  கேரளா
    போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை பாகிஸ்தான்
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  உலக செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023