NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி 
    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி

    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி 

    எழுதியவர் Nivetha P
    May 08, 2023
    05:36 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று(மே.,8) வெளியானது.

    இந்த தேர்வினை எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

    கடந்த ஆண்டினை விட இந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 பொது தேர்வினை எழுதிய ஒரே திருநங்கை மாணவி ஸ்ரேயா 600க்கு 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணவேணி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவி ஸ்ரேயா பயின்றுள்ளார்.

    இவரின் தேர்ச்சி குறித்து செய்திகள் பரவிய நிலையில், பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.

    தேர்வு

    தேர்ச்சியடைந்த திருநங்கை மாணவி ஸ்ரேயா பேட்டி 

    இதுகுறித்து பேசிய திருநங்கை மாணவி ஸ்ரேயா, நான் தேர்ச்சியடைந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    நான் தேர்ச்சிப்பெற உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.

    என்னுடைய திருநங்கை சமூகத்திற்கே பெருமை சேர்க்கும் விதமாக இந்த தேர்ச்சியானது அமைந்துள்ளது.

    எந்த திருநங்கையும் தவறான பாதைக்கு செல்லாமல் அனைவரும் கல்வியை நோக்கி தான் செல்லவேண்டும் என்பது தான் எனது ஆசை.

    என்னுடைய ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் என்னை மாணவியாக மட்டும் தான் பார்த்தார்கள். யாரும் என்னை திருநங்கை என்று கூறி ஒதுக்கவில்லை.

    இப்பொழுது கல்லூரியில் பி.பி.ஏ.படிப்பில் சேரவுள்ளேன்.

    அதனை முடித்துவிட்டு எம்.பி.ஏ.படிக்கவுள்ளேன்.

    எனது குடும்பம் ஏழ்மையான குடும்பம்.

    எனது படிப்பிற்கு அரசாங்கம் உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்கள்
    திருநங்கை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    தரமற்ற குடிநீர் குளிர்பானம் வழங்கினால் இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்!  உணவு குறிப்புகள்
    தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்  மு.க ஸ்டாலின்
    லைக்ஸ் பாலோவர்ஸ்களை அதிகரிக்க செய்வதாக நூதன மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை!  இன்ஸ்டாகிராம்
    வங்கக்கடலில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு

    திருநங்கை

    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025