NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள்
    இந்த தகவல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    May 09, 2023
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    1978 மற்றும் 2018க்கு இடைப்பட்ட 40 ஆண்டுகளில், கர்நாடக சட்டசபைக்கு 62 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் மொத்த பெண் வேட்பாளர்களில் சுமார் ஆறு சதவீதம் பேர் மட்டுமே நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டிருக்கின்றனர்.

    மேலும், கர்நாடக மாநிலம் இதுவரை ஒரு பெண் முதலமைச்சரை கூட கண்டதில்லை.

    அதிகபட்சமாக 1989இல் 10 பெண்கள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறைந்தபட்சமாக 1983ல் ஒரு பெண் மட்டுமே சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த தகவல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

    கடந்த மூன்று தேர்தல்களில் வெறும் 16 பெண்கள் மட்டுமே சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    2018இல் ஏழு பெண்களும், 2013இல் ஆறு பெண்களும், 2008இல் மூன்று பெண்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்கிறது நியூஸ் 18 செய்திகள்.

    details

    2018ஆம் ஆண்டில் 91% பெண் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்

    1978 மற்றும் 2018க்கு இடைப்பட்ட தேர்தல்களில் கலந்துகொண்ட பெண் வேட்பாளர்களில் 83%க்கும் அதிகமானோர் டெபாசிட் இழந்து தோல்வியடைந்துள்ளனர்.

    1,040 பெண் வேட்பாளர்களில் குறைந்தது 864 பேர் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

    2018ஆம் ஆண்டில், 219 பெண் வேட்பாளர்களில் 200 பேர் டெபாசிட் இழந்தனர். அப்போது டெபாசிட் இழந்த பெண்களின் சதவீதம் 92 ஆக இருந்தது.

    அதேபோல், 2013இல் போட்டியிட்ட 175 பெண்களில் 159 பேர் டெபாசிட்களை இழந்தனர். இது சுமார் 91%ஆகும்.

    இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 1978இல் கூட, கர்நாடக வாக்காளர்களில் கிட்டத்தட்ட 50% பேர் பெண்களாக இருந்தனர். அதாவது, 1.79 கோடி வாக்காளர்களில், 88.08 லட்சம்(49.17%) பேர் பெண்கள் ஆவர்.

    எனினும், அம்மாநிலத்தில் பெண் வேட்பாளர்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கர்நாடகா
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்

    இந்தியா

    இண்டர்காண்டினென்டல் கோப்பை 2023 : 41 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா கால்பந்து
    மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு  காவல்துறை
    பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது பாகிஸ்தான்
    ஏர் இந்தியா ஆட்சேர்ப்பு - 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் குவிந்துள்ளதாக மகிழ்ச்சி!  ஏர் இந்தியா

    கர்நாடகா

    பெங்களூரு காவல்துறையின் புதுவிதமான வீடியோ வைரல் இந்தியா
    பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் மோடி
    அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு இந்தியா
    இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி மோடி

    தேர்தல்

    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு எடப்பாடி கே பழனிசாமி
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி தமிழ்நாடு
    ஈரோடு இடைத்தேர்தல் - முதல்வரை சந்தித்து ஆதரவு கோரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல் அமைச்சர்
    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் ஈரோடு

    தேர்தல் ஆணையம்

    புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு உச்ச நீதிமன்றம்
    அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025