NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - தமிழக அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - தமிழக அரசு 
    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - தமிழக அரசு

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - தமிழக அரசு 

    எழுதியவர் Nivetha P
    May 08, 2023
    11:17 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் அங்கவன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறையாக 15 நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு வரும் மே 10ம்தேதி முதல் 24ம்தேதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது.

    இந்த நாட்களில் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு 'ஊட்டச்சத்தை உறுதி செய்'என்னும் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து இந்த பெட்டகமானது மே 9ம்தேதியே வழங்கப்படவுள்ளது.

    2 முதல் 6 வயது முன்பருவக்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஒரு நாளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினை கணக்கிட்டு, 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமாவினை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை 

    சத்துமாவு வீட்டிற்கு கொடுத்து விடப்படும் 

    அவ்வாறு வழங்கப்படும் சத்துமாவினை வீட்டுக்கு கொண்டு சென்று பெற்றோர்கள் பயன்படுத்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், மே மாதம் வழக்கத்தைவிட 50% குழந்தைகள் மட்டுமே மையங்களுக்கு வருவார்கள் என ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குனர் மற்றும் குழும இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, அந்த அளவிற்கான குழந்தை வளர்ச்சி பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குனருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    இதில் கூடுதல் தேவை ஏற்பட்டால், அது குறித்து தனியே பரிசீலிக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குனர் மற்றும் குழும இயக்குனர் கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    தமிழக அரசு

    பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபாவை பகுதிநேர பயிற்சியாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு விளையாட்டு
    தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - ட்ரெண்டிங்கின் எதிரொலி ட்விட்டர்
    ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு

    தமிழ்நாடு

    12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!  ஸ்டாலின்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் 80,000 பேர் விண்ணப்பம் - தமிழக அரசு  தமிழக அரசு
    தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி தேர்வு கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025