NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக
    அடுத்த செய்திக் கட்டுரை
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக
    இந்தியாவில் இருந்து கர்நாடகத்தைப் பிரிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2023
    05:10 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் மற்றும் அதன் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடிதம் எழுதியுள்ளது.

    "கர்நாடகத்தின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும் அல்லது ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது" என்று சோனியா காந்தி கூறியதாக மே 6 அன்று காங்கிரஸ் ட்வீட் செய்திருந்தது.

    இது குறித்து நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் இருந்து கர்நாடகத்தைப் பிரிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில், கர்நாடகாவின் "இறையாண்மை" குறித்து பேசியதற்காக சோனியா காந்தி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது.

    details

    இந்திய நாட்டை சீர்குலைக்கும் செயல்: பாஜக 

    "தேசியவாதிகள், அமைதியை விரும்புபவர்கள் மற்றும் முற்போக்காளர்களான கர்நாடக மக்களைத் தூண்டிவிடுவதற்காகவே அத்தகைய ட்வீட் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் நிலவும் நல்லிணக்கம் மற்றும் அமைதியை சீர்குலைப்பதே அதன் நோக்கம். சில தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் குழுக்களின் வாக்குகளை/ஆதரவைப் பெறும் நோக்கத்தோடு அது செய்யப்பட்டியிருக்கிறது. மேலும், அது இந்திய நாட்டை சீர்குலைக்கும் செயல்," என்று பா.ஜ.க. தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

    மேலும், காங்கிரஸ் கட்சி இந்திய அரசுக்கு விரோதமான சக்திகளின் பக்கம் நிற்கிறது என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங், பாஜக பொதுச் செயலாளர் தருண் சுக் ஆகியோர் தலைமையிலான பாஜக பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணையத்திற்கு சென்று இந்தக் கடிதத்தை சமர்ப்பித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    காங்கிரஸ்
    சோனியா காந்தி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி - சேலத்தில் நடந்த சோக சம்பவம்!  சேலம்
    அருணாச்சலில் உள்ள பகுதிகளின் பெயரை சீனாவால் மாற்ற முடியாது:  பழமையான மடாலயம் அதிருப்தி சீனா
    பழைய பொருட்கள் வாங்க விற்க உதவும் செயலிகள் மூலம் நூதன மோசடி - எச்சரிக்கை! சைபர் கிரைம்
    தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி! மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்! மத்திய அரசு

    காங்கிரஸ்

    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம் இந்தியா
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் ராகுல் காந்தி

    சோனியா காந்தி

    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி இந்தியா
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி இந்தியா

    நரேந்திர மோடி

    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி பாஜக
    கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார் மேகாலயா
    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ நாகாலாந்து
    இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஒன்றாக காண இருக்கும் இருநாட்டு பிரதமர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025