NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
    சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனம்

    சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 09, 2023
    12:49 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தங்களுடை முதல் ஏசி தொழிற்சாலையை சென்னையில் அமைக்கவிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி எலெக்ட்ரிக்.

    இதற்காக ரூ.1,819 கோடி நிதியை முதலீடு செய்யவிருக்கிறது அந்நிறுவனம். இந்த தொழிற்சாலை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை கடந்த சில மாதங்களாக தமிழக அரசுடன் நடத்தி வந்தது அந்நிறுவனம்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்தப் புதிய முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியிருக்கிறது.

    இந்த தொழிற்சாலையை சென்னையில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெருவயலில் இருக்கும் மஹிந்திராவின் ஆரிஜின்ஸில் கட்ட திட்டமிட்டிருக்கிறது மிட்சுபிஷி.

    இதற்காக மஹிந்திரா தொழிற்சாலைப் பூங்காவுடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறது மிட்சுபிஷி. 52 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய தொழிற்சாலை கட்டப்படவிருக்கிறது.

    சென்னை

    புதிய ஏசி தொழிற்சாலை: 

    ஐரோப்பா அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் புதிய தொழிற்சாலைகளை கட்டமைப்பதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருந்தது அந்நிறுவனம்.

    அதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்தியாவிலும் தங்களுடைய மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா துணை நிறுவனத்தின் மூலம் 222 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.1,800 கோடி) முதலீடு செய்யவிருக்கிறது.

    அக்டோபர் 2025 முதல் இந்தப் புதிய தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்தப் புதிய தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் சாதனங்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்கு மட்டுமே, ஏற்றுமதி செய்யும் திட்டம் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது மிட்சுபிஷி.

    மேலும், இந்தப் புதிய தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம் 2,000 பேருக்கும் மேல் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ஜப்பான்
    முதலீடு

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சென்னை

    '40 வயதில் யூத் ஐகான் விருது': மத்திய அமைச்சர் கையால் விருது பெற்ற தனுஷ் தனுஷ்
    சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது  தமிழ்நாடு
    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை காவல்துறை
    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை  காவல்துறை

    ஜப்பான்

    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு? உலகம்
    RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது திரையரங்குகள்

    முதலீடு

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025