NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
    சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
    இந்தியா

    சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 09, 2023 | 12:49 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
    சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனம்

    இந்தியாவில் தங்களுடை முதல் ஏசி தொழிற்சாலையை சென்னையில் அமைக்கவிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி எலெக்ட்ரிக். இதற்காக ரூ.1,819 கோடி நிதியை முதலீடு செய்யவிருக்கிறது அந்நிறுவனம். இந்த தொழிற்சாலை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை கடந்த சில மாதங்களாக தமிழக அரசுடன் நடத்தி வந்தது அந்நிறுவனம். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்தப் புதிய முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியிருக்கிறது. இந்த தொழிற்சாலையை சென்னையில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெருவயலில் இருக்கும் மஹிந்திராவின் ஆரிஜின்ஸில் கட்ட திட்டமிட்டிருக்கிறது மிட்சுபிஷி. இதற்காக மஹிந்திரா தொழிற்சாலைப் பூங்காவுடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறது மிட்சுபிஷி. 52 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய தொழிற்சாலை கட்டப்படவிருக்கிறது.

    புதிய ஏசி தொழிற்சாலை: 

    ஐரோப்பா அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் புதிய தொழிற்சாலைகளை கட்டமைப்பதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருந்தது அந்நிறுவனம். அதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்தியாவிலும் தங்களுடைய மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா துணை நிறுவனத்தின் மூலம் 222 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.1,800 கோடி) முதலீடு செய்யவிருக்கிறது. அக்டோபர் 2025 முதல் இந்தப் புதிய தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் சாதனங்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்கு மட்டுமே, ஏற்றுமதி செய்யும் திட்டம் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது மிட்சுபிஷி. மேலும், இந்தப் புதிய தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம் 2,000 பேருக்கும் மேல் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    ஜப்பான்
    முதலீடு

    சென்னை

    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை என்ஐஏ
     ஃபர்ஹானா படத்தின் சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்  தமிழ் திரைப்படங்கள்
    சவரனுக்கு 46,000 -ஐ எட்டிய தங்கம் விலை - புதிய உச்சத்தின் விலை நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  தமிழ்நாடு

    ஜப்பான்

    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் உலகம்
    வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள் உலகம்
    ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு உலகம்
    இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் இந்தியா

    முதலீடு

    குறையும் முதலீடுகள்.. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்! முதலீட்டாளர்
    அஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது?  வங்கி வட்டி விகிதம்
    அட்சய திருதியை 2023: சரியான தங்க நகைகளை எப்படி தேர்வு செய்வது? தங்கம் வெள்ளி விலை
    அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!  பங்குச் சந்தை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023