NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம் 
    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    May 08, 2023
    07:58 pm
    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம் 
    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்

    தமிழ்நாடு மாநிலம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியினை மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏப்ரல், மே மாதமான கோடை சீசனில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் காணப்படும். தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மலர்கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல கோடை விழாக்கள் இங்கு நடக்கும். இந்நிலையில் ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல நிகழ்ச்சிகள் இந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் புகைப்பட கண்காட்சியும் நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2/2

    புகைப்பட கண்காட்சிக்கு கட்டணம் இல்லை 

    அதன்படி, இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியானது அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மே 7ம் தேதி துவங்கிய இந்த கண்காட்சியானது வரும் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட வருவோருக்கு மாவட்ட நிர்வாகம் பல வசதிகளை செய்துள்ளது. இந்த கண்காட்சிக்கு என்று கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இப்புகைப்பட கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சூழல், இங்கு வாழும் வன விலங்குகள், பழங்குடி மக்களின் கலாச்சாரம், அவர்களின் வாழ்வியல் முறை, பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்களின் புகைப்படங்கள் ஆகியன வைக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    ஊட்டி
    ஊட்டி

    தமிழ்நாடு

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை  புதுச்சேரி
    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  பள்ளி மாணவர்கள்
    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி இந்தியா
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா

    ஊட்டி

    ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை  ஊட்டி
    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு  ஊட்டி
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஊட்டி

    ஊட்டி

    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்  ஊட்டி
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி
    ஊட்டி மலர் கண்காட்சி - டிஜிபி சைலேந்திர பாபுவுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் ஊட்டி
    சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள்  தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023