NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு
    பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி கட்சி இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று கூறி வருகிறது.

    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2023
    12:28 pm

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு அருகிலுள்ள ஹெரிடேஜ் தெருவில் இன்று(மே 8) காலை இரண்டாவது குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

    தகவல்களின்படி, இந்த குண்டுவெடிப்பு காலை 6:30 மணியளவில் நடந்தது.

    கடந்த சனிக்கிழமை, இதே போன்ற இன்னொரு சம்பவம் பொற்கோயிலுக்கு அருகே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    "நாங்கள் இது குறித்து விசாரித்து வருகிறோம். இங்கு நிலைமை சாதாரணமாக உள்ளது. நாசவேலை எதிர்ப்பு படை, வெடிகுண்டு படை மற்றும் FSL குழுக்கள் இங்கு உள்ளன. ஒருவருக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது" என்று கூடுதல் துணை போலீஸ் கமிஷனர்(ADCP) மெஹ்தாப் சிங் தெரிவித்துள்ளார்.

    வெடிகுண்டு படை மற்றும் தடய அறிவியல் ஆய்வக(FSL) குழு குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு சென்றுள்ளது.

    details

    இது பயங்கரவாத தாக்குதல் இல்லை:  ஆம் ஆத்மி 

    முதல் குண்டுவெடிப்பு பன்சால் இனிப்பு கடை அருகே நடந்தது. இரண்டாவது குண்டுவெடிப்பு அதே இடத்திற்கு அருகில், ஆனால் எதிர் பக்கத்தில் நடந்துள்ளது.

    அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார், வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

    முதல் குண்டுவெடிப்பு சனிக்கிழமை இரவு நடந்தது. இதனால், ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும் சில கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

    பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி கட்சி இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று கூறி வருகிறது.

    இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

    முதல் குண்டுவெடிப்பு குறித்து போலீசார் தடயவியல் விசாரணையை மேற்கொண்டனர், ஆனால் இது குறித்த அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பஞ்சாப்
    குற்றவியல் நிகழ்வு

    சமீபத்திய

    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்

    இந்தியா

    மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு  டெல்லி
    இந்தியாவில் ஒரே நாளில் 3,962 கொரோனா பாதிப்பு: 22 பேர் உயிரிழப்பு கொரோனா
    ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் காயம்  இந்திய ராணுவம்
    மணிப்பூரில் வன்முறை: மாநிலம் முழுவதும் இராணுவ பாதுகாப்பு இந்திய ராணுவம்

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை இந்தியா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

    குற்றவியல் நிகழ்வு

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  இந்தியா
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025