NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு
    இந்தியா

    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2023 | 12:28 pm 1 நிமிட வாசிப்பு
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு
    பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி கட்சி இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று கூறி வருகிறது.

    பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு அருகிலுள்ள ஹெரிடேஜ் தெருவில் இன்று(மே 8) காலை இரண்டாவது குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. தகவல்களின்படி, இந்த குண்டுவெடிப்பு காலை 6:30 மணியளவில் நடந்தது. கடந்த சனிக்கிழமை, இதே போன்ற இன்னொரு சம்பவம் பொற்கோயிலுக்கு அருகே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. "நாங்கள் இது குறித்து விசாரித்து வருகிறோம். இங்கு நிலைமை சாதாரணமாக உள்ளது. நாசவேலை எதிர்ப்பு படை, வெடிகுண்டு படை மற்றும் FSL குழுக்கள் இங்கு உள்ளன. ஒருவருக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது" என்று கூடுதல் துணை போலீஸ் கமிஷனர்(ADCP) மெஹ்தாப் சிங் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு படை மற்றும் தடய அறிவியல் ஆய்வக(FSL) குழு குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு சென்றுள்ளது.

    இது பயங்கரவாத தாக்குதல் இல்லை:  ஆம் ஆத்மி 

    முதல் குண்டுவெடிப்பு பன்சால் இனிப்பு கடை அருகே நடந்தது. இரண்டாவது குண்டுவெடிப்பு அதே இடத்திற்கு அருகில், ஆனால் எதிர் பக்கத்தில் நடந்துள்ளது. அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார், வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். முதல் குண்டுவெடிப்பு சனிக்கிழமை இரவு நடந்தது. இதனால், ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும் சில கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன என்றும் போலீஸார் தெரிவித்தனர். பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி கட்சி இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று கூறி வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. முதல் குண்டுவெடிப்பு குறித்து போலீசார் தடயவியல் விசாரணையை மேற்கொண்டனர், ஆனால் இது குறித்த அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    பஞ்சாப்
    குற்றவியல் நிகழ்வு

    இந்தியா

    ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி  ராஜஸ்தான்
    "இந்தியா முன்னோடியாகத் திகழ வேண்டும்".. ICANN சிஇஓ சாலி காஸ்டெர்டன்! இந்தியா
    கடுமையான வெப்ப அலைகளின் தாக்கம் மேலும் உயரும்: நிபுணர்கள் பாகிஸ்தான்
    கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி  கேரளா

    பஞ்சாப்

    காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி  இந்தியா
    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் இந்தியா
    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்  இந்தியா
    முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு  இந்தியா

    குற்றவியல் நிகழ்வு

    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  இந்தியா
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023