NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி 
    பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி

    பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி 

    எழுதியவர் Nivetha P
    May 08, 2023
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா மாநிலத்தில் வரும் 10ம்தேதி 224 தொகுதிகளை கொண்ட சட்டசபைத்தேர்தல் நடக்கவுள்ளது.

    கர்நாடகத்தில் தற்போது இந்த தேர்தலினையொட்டி அம்மாநில அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

    அதன்படி இந்த பிரச்சாரமானது இன்று(மே.,8)மாலை 6 மணியளவில் நிறைவுப்பெறுகிறது.

    இதனையடுத்து 6 மணிக்குமேல் தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்கவேண்டும்.

    அதேபோல் நட்சத்திர பேச்சாளர்களும் 6 மணியோடு தொகுதிகளை விட்டுவெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதற்கிடையே, பெங்களூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களோடு மக்களாக இயல்பாக சேர்ந்து வாக்குகளை சேகரித்தார்.

    பெங்களூரில் கன்னிங்காம் சாலையில் உள்ள காபிஷாப் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

    பின்னர் அங்கிருந்து வெளியே வந்த அவர் பேருந்துநிறுத்தத்துக்கு சென்றுள்ளார்.

    ராகுல் காந்தி 

    சக பயணிகள் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்

    அங்கு சென்றஅவர், பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அவர் உரையாடினார். அதனையடுத்து அவர்களோடு பேருந்தில் பயணமும் செய்துள்ளார்.

    அப்போது அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளான பெண்களுக்கு இலவசப்பேருந்து சேவை மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2ஆயிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறியுள்ளார்.

    அதனையடுத்து பேருந்து பயணங்களில் தங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் குறித்தும், விலைவாசியுயர்வு ஆகியன குறித்து ராகுல்காந்தியிடம் பெண்கள் கூறியுள்ளார்கள்.

    லிங்காராஜபுரம் என்னும் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி அங்கிருந்த பொதுமக்களிடம் காங்கிரஸ் வெற்றிப்பெறவேண்டிய அவசியம் குறித்து எடுத்துக்கூறினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும் இந்த பயணத்தின்பொழுது, ராகுல்காந்தியோடு பயணம்செய்த சகபயணிகள் அவர்களோடு சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    காங்கிரஸ்
    கர்நாடகா
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ஜம்மு காஷ்மீர்
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ஜம்மு காஷ்மீர்
    ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி மோடி
    வைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ இந்தியா

    காங்கிரஸ்

    ராகுல் காந்தி தகுதி நீக்கத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ராகுல் காந்தி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம் இந்தியா
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா

    கர்நாடகா

    கர்நாடகாவில் ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்த பிரதமர் மோடி இந்தியா
    கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் பாஜக
    வாடகை வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க முடியாததால் நூதன விளம்பரம் - வைரலாகும் போஸ்டர் சமூக வலைத்தளம்
    பெங்களூரு காவல்துறையின் புதுவிதமான வீடியோ வைரல் இந்தியா

    தேர்தல் ஆணையம்

    புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு உச்ச நீதிமன்றம்
    அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025