NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு 
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு 

    எழுதியவர் Nivetha P
    May 08, 2023
    07:16 pm

    செய்தி முன்னோட்டம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல அடுக்கு பாதுகாப்பினை மீறி கோயிலுக்குள் செல்போன் கொண்டு சென்று ஒரு பக்தர் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த சம்பவம் தற்போது திருப்பதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் திருப்பதி கோயில் இடம்பெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதனால் தேவஸ்தான நிர்வாகத்துடன் இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    திருப்பதி கோயிலின் ஒட்டுமொத்த பாதுகாப்பினை மாநில காவல்துறையும், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினரும் மேற்கொண்டுள்ளார்கள்.

    மேலும் தீவிரவாத தாக்குதல் போன்ற அவசரக்கால நேரத்தில் விரைந்து செயல்படுவதற்கான அதிரடி படை பயிற்சியினை பெற்ற ஆக்டோபஸ் படையினரும் திருப்பதி மலையில் தொடர்ந்து முகாமிட்டுள்ளார்கள்.

    திருப்பதி 

    பக்தர் எடுத்த வீடியோ பதிவு குறித்து விசாரணை துவக்கம் 

    இந்நிலையில் திருப்பதியில் நாச வேலைகள் நடக்காமல் தடுக்க செல்போனுக்கும், தண்ணீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தீவிர பரிசோதனைக்கு பின்னரே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலும் பக்தர் ஒருவர் கோயிலுக்குள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

    வெள்ளிவாசலை தாண்டி கேமரா எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இவர் வெள்ளிவாசலினை தாண்டியும் வீடியோ எடுத்துள்ளார்.

    பக்தரின் இந்த செயல் மூலம் திருப்பதி கோயில் பாதுகாப்பில் பெரும் பின்னடைவு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இது குறித்து தேவஸ்தான விஜிலென்ஸ்துறை அளித்துள்ள புகாரின் பேரில் திருமலை காவல்துறை வீடியோ எடுத்த பக்தர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையினை துவக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    காவல்துறை
    காவல்துறை
    மாநில அரசு

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா

    காவல்துறை

    நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது  தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு  திருநெல்வேலி
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது  கோவை
    சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண் சென்னை

    காவல்துறை

    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை சென்னை
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது  திருப்பூர்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்  சென்னை

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025