NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல் 
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்

    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல் 

    எழுதியவர் Nivetha P
    May 08, 2023
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயமானதாக தேசிய குற்ற ஆவண காப்பகம்(என்.சி.ஆர்.பி.) தெரிவித்துள்ளது.

    கடந்த 2016ம் ஆண்டு 7,105 பெண்கள், 2017ம் ஆண்டு 7,712 பெண்கள், 2018ம் ஆண்டு 9,246 பெண்கள், 2019ம் ஆண்டு 9,268 பெண்கள், 2020ம் ஆண்டு 8,290 பெண்கள் மாயமாகியுள்ளார்கள்.

    இதன்படி, 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இது குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணையம் உறுப்பினரான கதிர் சின்ஹா கூறுகையில், சில காணாமல்போன கடத்தல் வழக்குகளில் சிறுமிகளும், பெண்களும் குஜராத் தவிர மற்ற மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்கு அனுப்பப்படுவதை நான் கவனித்துள்ளேன் என்று கூறினார்.

    கடத்தல்

    அகமதாபாத் மற்றும் வதோதராவில் 4,722 பெண்கள் மாயம் 

    தொடர்ந்துப்பேசிய அவர், காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளை காவல்துறை தீவிரமாக கையாளாத காரணத்தினால்தான் பெண்கள் கடத்தல் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.

    இந்த வழக்குகள் கொலை வழக்குகளை விட தீவிரமானது.

    எனவே, ஒரு கொலை வழக்கினை விசாரிப்பது போல், காணாமல் போனோர் வழக்குகளையும் மிககடுமையாக காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் அகமதாபாத் மற்றும் வதோதராவில் 2019-2020ஆண்டில் மட்டும் 4,722பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய குஜராத் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஹிரேன் பேங்கர், கேரளா பெண்கள் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சிக்கிறார்கள்.

    ஆனால் நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 41000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்
    காவல்துறை
    காவல்துறை
    கடத்தல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேர்தல்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? இந்தியா
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா

    காவல்துறை

    சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி  சென்னை
    நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது  தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு  திருநெல்வேலி
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது  கோவை

    காவல்துறை

    சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண் சென்னை
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை சென்னை
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது  திருப்பூர்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025