இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
குஜராத் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட 3,300 கிலோ போதை பொருட்கள்
இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் (ATS) உதவியுடன் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB), குஜராத் கடற்கரையில் சந்தேகத்திற்குரிய பாகிஸ்தானிய பணியாளர்களால் இயக்கப்பட்ட படகில் இருந்து 3,300 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியது.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு பறந்த உத்தரவு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ஹிமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாஜக
ஹிமாச்சல பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஆளுநரை சந்தித்து பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி சாந்தன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன், இன்று காலை மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 55.
17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் 3 ராஜ்யசபா தொகுதிகளில் வெற்றி: குறுக்கு வாக்கு மூலம் பாஜக 1 தொகுதியில் வெற்றி
இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் மூன்று ராஜ்யசபா இடங்களை வென்றது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 934 பேருக்கு கொரோனா சிகிச்சை
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 121 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.
"அரசாங்கத்தின் கண்கள் மூடப்பட்டுள்ளன": பொய்யாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் என்று கூறி "தவறான" விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக சாடியுள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு
இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவையும், எம்ஜிஆர்யும் புகழ்ந்த மோடி
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார்.
எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம்: சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அபராதம்
சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மருத்துவமனை எம்.ஜி.எம்.
வரும்..ஆனா வராது: அதிமுகவிற்கு பாஜக தலைவர்கள் மாறினார்களா?
இன்று மதியம் 2 மணியளவில் பாஜகவை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைய போவதாக இன்று காலை, அதிமுகவின் எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் தெரிவித்தார்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குனரகம் 8வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்யசபா சீட் கேட்கும் தேமுதிக; மறுக்கும் அதிமுக: இழுபறியில் கூட்டணி பேச்சுவார்த்தை
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு தேமுதிக சந்திக்கவுள்ள முதல் தேர்தல் இது.
வீடியோ: தெலுங்கானாவில் பறந்து வந்து மற்றொரு வாகனம் மீது மோதிய கார்
தெலுங்கானா மாநிலம், சித்திபேட்டையில் இருந்து ஹைதராபாத் நோக்கி வேகமாகசென்று கொண்டிருந்த கார் ஒன்று டிவைடரில் மோதி மற்றொரு காரை மோதியதால் 4 பேர் காயமடைந்தனர்.
4 ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களின் பெயர்களை அறிவித்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்
கடந்த ஆண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எல்டி தலைவர் நஃபே சிங் ரதி சுட்டுக் கொலை: இங்கிலாந்து ரவுடியை வலை வீசி தேடும் போலீசார்
இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவர் நஃபே சிங் ரதியின் கொலைக்குப் பின்னால் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு கும்பல் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
3 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல்: 41 உறுப்பினர்கள் ஏற்கனேவே போட்டியின்றி தேர்வு
இன்று நடைபெறவிருக்கும் ராஜ்யசபா இருபதாண்டுத் தேர்தல்களில், ஏற்கனவே 41 வேட்பாளர்கள் எதிர்ப்பின்மையால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
எதிர்வரும் மக்களவை தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆளும் பாஜக கட்சியினரும், பிரதமர் மோடியும், தங்கள் பங்கிற்கு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அரசு திட்டங்களையும், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
கான்பூரில் 4,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் மிகப்பெரிய வெடிமருந்து வளாகம்
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கான்பூரில், அதானி வெடிமருந்து வளாகத்தை திறந்து வைத்தார்.
ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: சந்தேஷ்காலி வழக்கில் மேற்கு வங்காளத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், நிலத்தை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்காள அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பிரார்த்தனை தொடரும்: மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்
ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்து மத வழிபாடுகளை நடத்த அனுமதிக்கும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வீட்டு வசதி வாரியத்தின் வீடு ஒதுக்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது, 2012ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
இன்று நடைபெறுகிறது விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லி-நொய்டா எல்லையில் பெரிய நெரிசல் ஏற்பட வாய்ப்பு
உத்தரபிரதேசத்தின் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் யமுனா விரைவுச்சாலை வழியாக இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர்.
கலைஞர் கருணாநிதியின் நினைவிடம்: இன்று மாலை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் நினைவிடம் ஆகியவை இன்று (26 பிப்ரவரி) இரவு 7 மணியளவில் திறக்கப்படவுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ அனுப்பிய சம்மனை நிராகரித்தார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா
பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் கவிதா, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்கு நாளை ஆஜராக முடியாது என்று மத்திய புலனாய்வுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 897 பேருக்கு கொரோனா சிகிச்சை
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 110 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.
ஹரியானா ஐஎன்எல்டி தலைவர் நஃபே சிங் ரதி சுட்டுக் கொலை
ஹரியானா இந்திய தேசிய லோக்தள தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் ரதி, ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது எஸ்யூவியில் பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி
மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், தனது பிரபலமான வானொலி நிகழ்ச்சியான 'மனதின் குரல்' அடுத்த மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அரபிக்கடலில் மூழ்கி நீருக்கடியில் பூஜை செய்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தின் கடற்கரையில் உள்ள அரபிக்கடலில் மூழ்கி துவாரகாவின் புராதன ஸ்தலத்தில் நீருக்கடியில் பூஜை செய்தார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுவதாகப் போலிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் அட்டவணை எப்போதும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பரப்பப்படாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
குஜராத்தின் துவாரகாவில் இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
மும்பை உள்ளூர் ரயிலில் பயணித்து பயணிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பை உள்ளூர் ரயிலில் சனிக்கிழமை பயணம் செய்து பயணிகளுடன் கலந்துரையாடினார்.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது 3 புதிய குற்றவியல் சட்டங்கள்
இந்திய தண்டனைச் சட்டம்(IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம்( CrPC ), சாட்சியச் சட்டம், 1872 ஆகிய மூன்று சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பட்டியலில் 118 பேர் கொண்ட வேட்பாளர்களின் முதல் பட்டியலை இன்று வெளியிட்டனர்.