இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
பஞ்சாபில் ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டம்; மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை எனத்தகவல்
விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடத்திவரும் நிலையில், முக்கிய கோரிக்கைகள் மீது தீர்வு காணும் வகையில், இன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
ஆல் தி பெஸ்ட்! சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத் தேர்வு தொடக்கம்
CBSE வழி 10-ஆம் வகுப்பு, மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (பிப்ரவரி 15) தொடங்குகிறது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன்
மதுபான கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் மேலும் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 120 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
"உலகிற்கு தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்பம் சார்ந்த அரசுகள் தேவை": பிரதமர் மோடி
துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதிற்கு தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் அவசியம் என்று அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம்
இன்று தமிழக சட்டப்பேரவையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொள்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
'நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார்': விவசாய அமைப்புகள்
நிபந்தனைகளுக்கு உட்பட்டு மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு அறிவித்துள்ளது.
மீண்டும் ராஜ்ய சபா MP ஆகிறார் எல்.முருகன்
மத்தியபிரதேசத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என பாஜக கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸில் பெரும் மாற்றம்: ராஜ்யசபாவுக்கு மாறினார் சோனியா காந்தி
ராஜஸ்தானில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை சோனியா காந்தி இன்று தாக்கல் செய்தார்.
சென்னையின் ஐகானிக் உதயம் தியேட்டர் மூடப்படுகிறது
சென்னையின் பிரபலமான அடையாளத்தின் ஒன்று உதயம் தியேட்டர். அந்த திரையரங்கம் தற்போது மூடுவிழா காணவுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் குறித்த வதந்திகளுக்கு எதிராக CBSE எச்சரிக்கை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வரவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த வதந்திகள் மற்றும் போலியான தகவல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: தமிழக அரசு உத்தரவு
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
விவசாயிகள் போராட்டத்தின் 2வது நாள்: விவசாயிகள் மீண்டும் பேரணியை தொடங்க முயற்சி; டெல்லி எல்லையில் பெரிய போக்குவரத்து நெரிசல்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நேற்று இரவு போராட்டத்தை நிறுத்திவிட்டு இன்று மீண்டும் அதை தொடங்கியுள்ளனர்.
சட்டப்பேரவையில் ஓபிஎஸின் இருக்கை மாற்றம்
தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமர்வதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சபாநாயகரிடம், இருக்கை மாற்றல் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் சோனியா காந்தி
ராஜ்யசபா தேர்தலில் ராஜஸ்தானில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
வெற்றி துரைசாமியின் தகனத்திற்கு பிறகு சைதை துரைசாமி சூளுரை
சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல், நேற்று மாலை, கண்ணம்மாபேட்டையின் தகனம் செய்யப்பட்டது.
அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக்: மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு
வரும் பிப்ரவரி 15ஆம் தேதி, வியாழக்கிழமை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி
சூரிய சக்தி மற்றும் நிலையான முன்னேற்றத்தை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது அரசாங்கம் 'பிஎம் சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார்.
'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு
2022ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட MSP குழுவிற்கான பிரதிநிதிகளை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்று மத்திய அரசு ஒரு குற்றசாட்டை முன்வைத்துள்ளது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை.
இந்தியாவில் மேலும் 123 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 4 பேர் பலி
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 123 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
சாந்தன் இலங்கை செல்ல ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: மத்திய அரசு தகவல்
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கவனிப்பதற்காக தன்னை சொந்த ஊரான இலங்கைக்கு அனுப்பிவைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.
வீடியோ: ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட நபர் போலீஸ்காரரை கடித்ததால் பரபரப்பு
பெங்களூரு போக்குவரத்து காவலரை ஒருவர் கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டின் முதல் பெண் பழங்குடியின நீதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதல் பெண் பழங்குடியின நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தடுப்புகளை உடைத்து ஹரியானா-பஞ்சாப் எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள்: கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு
இன்று 'டெல்லி சலோ' போராட்டப் பேரணியைத் தொடங்கி, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவை நெருங்கும் போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான்
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், காங்கிரஸில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்தார்.
6 மாதத்திற்கு தேவையான பெட்டி படுக்கையுடன் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்: உளவுத்துறை கூறுவது என்ன?
டெல்லியின் முக்கிய சாலைகளை விடுத்து தொலைதூர மற்றும் மோட்டார் அல்லாத எல்லைகளை பயன்படுத்தி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவர் என்று விவசாயிகளின் போராட்டம் 2.0 பற்றிய உளவுத்துறை அறிக்கை கூறுகிறது.
விவசாயிகள் போராட்டம்: டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல்
டெல்லியில் இன்று விவசாயிகள் "டெல்லி சலோ" போராட்டத்தை தொடங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சோனியா காந்தி மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாற வாய்ப்பு
சோனியா காந்தி மக்களவையில் இனி போட்டியிட போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக அவரது மகளும் காங்கிரஸ் தலைவருமான பிரியங்கா காந்தி மக்களவையில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கூறியபடியே வெற்றியின் உடலை மீட்டவர்களுக்கு 1 கோடி சன்மானம் வழங்கிய சைதை துரைசாமி
ஹிமாச்சல பிரதேசத்தின் சட்லெஜ் நதியில் இருந்து, 8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமியின் உடல், நேற்று(12-பிப்ரவரி) மாலை மீட்கப்பட்டது.
விவசாயிகளின் போராட்டம் 2.0: 2020-ல் நடந்த போராட்டத்திற்கும்,'டெல்லி சலோ'விற்கும் என்ன வித்தியாசம்?
இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து போராட்டத்தை துவங்க உள்ளனர்.
தனது அமைச்சர் பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றி
பீகார் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது.
சட்லெஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளான வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது
சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மகனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகினார்
மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்: அலுவல் கூட்டத்தொடரில் முடிவு
இன்று,தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
விவசாயிகளின் முற்றுகை போராட்டம்: டெல்லியில் 144 தடை உத்தரவு
நாளை விவசாயிகள் அணிவகுப்பை முன்னிட்டு அமைதியின்மை மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில், மார்ச் 12ஆம் தேதி வரை பெரிய கூட்டங்களுக்கு டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.