NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விவசாயிகள் போராட்டம்: டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவசாயிகள் போராட்டம்: டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல்

    விவசாயிகள் போராட்டம்: டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 13, 2024
    01:01 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் இன்று விவசாயிகள் "டெல்லி சலோ" போராட்டத்தை தொடங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தின் காரணமாகவும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாகவும் டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    வாகனங்கள் நெரிசலில் சிக்கியதை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

    சிங்கு, காஜிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    போராட்டக்காரர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்கவும், சீரான போக்குவரத்தை பராமரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விவசாயிகள் தங்கள் பயிர்கள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை(எம்எஸ்பி) நிர்ணயிக்க ஒரு சட்டத்தை இயற்ற கோரி இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    டெல்லி

    விவசாயிகள் இதற்கு முன் நடத்திய மாபெரும் போராட்டம் 

    இதே போல், 2021 ஆம் ஆண்டு பண்ணை சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.

    அந்த போராட்டத்தின் போது குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அப்போது பண்ணை சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு தான் விவசாயிகளின் போராட்டங்கள் கைவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தற்போது விவசாயிகள் மேலும் ஒரு பெரும் கோரிக்கையை முன்வைத்து ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

    மேலும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    விவசாயிகள்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    டெல்லி

    நிதீஷ்குமாரின் "ஹிந்தி தேசிய மொழி" பேச்சுக்கு சத்குரு கண்டனம் சத்குரு
    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார் ராகுல் காந்தி
    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு நாடாளுமன்ற அத்துமீறல்
    வீடியோ: ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தைகளை தன் உடலை வைத்து பாதுகாத்த தாய்  பீகார்

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025