NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    Feb 13, 2024
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.

    இது அந்த வளைகுடா நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் ஏழாவது பயணமாகும்.

    அவர் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் கலந்துரையாடி, தற்போதைய மூலோபாய கூட்டாண்மை குறித்து இன்று விவாதித்தார்.

    இன்று அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

    அதோடு, அவரை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கட்டித்தழுவி வரவேற்றார்.

    இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவரின் அழைப்பின் பேரில் பிப்ரவரி 14ஆம் தேதி துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உலகத் தலைவர்களுடன் உரையாற்ற இருக்கிறார்.

    துபாய் 

    ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளது

    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோவிலான BAPS இந்து மந்திரையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

    அபுதாபியில் ஒரு சமூக நிகழ்ச்சியில் வெளிநாட்டு இந்தியர்களிடம் அவர் உரையாற்ற உள்ளார்.

    அந்த BAPS இந்து மந்திர் 27 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.

    அபுதாபியின் பட்டத்து இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப்படையின் துணை உச்ச தளபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2015 இல் நன்கொடையாக வழங்கிய 13.5 ஏக்கர் நிலப்பரப்பின் ஒரு பகுதியாக அந்த கோவில் அமைந்துள்ளது.

    கடந்த ஒன்பது ஆண்டுகளில், வர்த்தகம், பாதுகாப்பு, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துபாய்
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    துபாய்

    துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் மிக விலையுயர்ந்த வீடு, என்ன ஸ்பெஷல்? உலகம்
    வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம் பிரதமர் மோடி
    பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி உலகம்
    துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    நரேந்திர மோடி

    'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி  ஜி20 மாநாடு
    யூடியூபர்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி இந்தியா
    மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால் விஷால்
    9வது பி20 உச்சி மாநாட்டினை துவக்கி வைத்த பிரதமர் மோடி உரை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025