NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு 

    'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 13, 2024
    07:37 pm

    செய்தி முன்னோட்டம்

    2022ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட MSP குழுவிற்கான பிரதிநிதிகளை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்று மத்திய அரசு ஒரு குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

    டெல்லியில் இன்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் "டெல்லி சலோ" என்ற மாபெரும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    விவசாயிகள் தங்கள் பயிர்கள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை(எம்எஸ்பி) நிர்ணயிக்க ஒரு சட்டத்தை இயற்ற கோரி இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், இது குறித்து பேசியிருக்கும் மத்திய அரசு, ஜூலை 2022 இல் MSP சட்டத்தை திறம்பட இயற்ற அரசாங்கம் உருவாக்கிய குழுவிற்கான பிரதிநிதிகளை சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்று கூறியுள்ளது.

    டெல்லி

    2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு 

    பிரதமர் மோடியை மேற்கோள் காட்டி ஜூலை-12, 2022 அன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    "பூஜ்ஜிய பட்ஜெட் அடிப்படையிலான விவசாயத்தை ஊக்குவிக்கவும், நாட்டின் மாறிவரும் தேவைகளை மனதில் கொண்டு பயிர் முறைகளை மாற்றவும், MSPஐ மிகவும் பயனுள்ளதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்ற ஒரு குழு அமைக்கப்படும்." என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

    அந்த குழுவில், மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த குழுவிற்கான 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்ட்டனர். மேலும், விவசாய முன்னாள் செயலாளர் சஞ்சய்அகர்வால் அந்த குழுவுக்கான தலைவராக நியமிக்கப்பட்டார்.

    ஆனால், அந்த குழுவில் சேர்க்கப்பட வேண்டிய விவசாய உறுப்பினர்களை சம்யுக்த் கிசான் மோர்ச்சா பரிந்துரைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    வீடியோ: ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தைகளை தன் உடலை வைத்து பாதுகாத்த தாய்  பீகார்
    டெல்லியில் ஏற்பட்டிருக்கும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிப்பு  வானிலை ஆய்வு மையம்
    டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு இஸ்ரேல்
    டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை  இஸ்ரேல்

    மத்திய அரசு

    நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்  மு.க ஸ்டாலின்
    'வேலையில்லாத் திண்டாட்டம் தான் நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறலுக்கு காரணம்': ராகுல் காந்தி  நாடாளுமன்றம்
    இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல் இந்தியா
    புதிய தொலைத்தொடர்பு சட்ட வரைவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது மத்திய அரசு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025