NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தடுப்புகளை உடைத்து ஹரியானா-பஞ்சாப் எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள்: கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தடுப்புகளை உடைத்து ஹரியானா-பஞ்சாப் எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள்: கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு 

    தடுப்புகளை உடைத்து ஹரியானா-பஞ்சாப் எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள்: கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 13, 2024
    04:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று 'டெல்லி சலோ' போராட்டப் பேரணியைத் தொடங்கி, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவை நெருங்கும் போது, ​​போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    நேற்று இரவு விவசாயிகள் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையேயான முக்கியமான கூட்டம் எந்த முடிவும் இல்லாமல் முடிவடைந்ததை அடுத்து, 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இன்று பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

    குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதத்தை கோரி மத்திய அரசை வலியுறுத்தும் நோக்கில், 'டெல்லி சலோ' என்ற பேரணியை இன்று விவசாயிகள் தொடங்கினர்.

    டெல்லி

     போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு 

    விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு, டெல்லி காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.

    ஒன்றுகூடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து, ஒழுங்கை பராமரிக்க எல்லைகளை பலப்படுத்தியுள்ளது. தேசிய தலைநகரை நோக்கி பெரிய அளவிலான விவசாயிகளின் அணிவகுப்பால் டெல்லியை சுற்றியுள்ள நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதனால், காஜிபூர் மற்றும் சில்லா எல்லைகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்பட்டன.

    மேலும், பஞ்சாப்-ஹரியானா ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்கள் டிராக்டர்களால் சிமென்ட் தடுப்புகளை உடைக்க முயன்றதால் பதற்றம் அதிகரித்தது.

    அதனால், போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ட்ரோன்களைப் பயன்படுத்தி சில கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    பஞ்சாப்
    ஹரியானா

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    டெல்லி

    வீடியோ: ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தைகளை தன் உடலை வைத்து பாதுகாத்த தாய்  பீகார்
    டெல்லியில் ஏற்பட்டிருக்கும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிப்பு  வானிலை ஆய்வு மையம்
    டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு இஸ்ரேல்
    டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை  இஸ்ரேல்

    பஞ்சாப்

    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை இந்தியா
    மேல தாளம் முழங்க, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை வரவேற்க தயாராகும் தொண்டர்கள் இந்தியா
    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து இந்தியா

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்
    கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025