NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ அனுப்பிய சம்மனை நிராகரித்தார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ அனுப்பிய சம்மனை நிராகரித்தார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ அனுப்பிய சம்மனை நிராகரித்தார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 25, 2024
    08:51 pm

    செய்தி முன்னோட்டம்

    பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் கவிதா, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்கு நாளை ஆஜராக முடியாது என்று மத்திய புலனாய்வுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அவர் தனது கடிதத்தில், பல சமூக "அழுத்தங்கள்" குறித்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனு குறித்தும் மேற்கோள் காட்டியுள்ளார்.

    தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும் பிஆர்எஸ் தலைவருமான கே.கவிதா இந்த விசாரணை தொடர்பான சம்மனைத் தவிர்ப்பது இது இரண்டாவது முறையாகும்.

    கடைசியாக 2022 டிசம்பரில் சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணையில் இருந்து விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

    இந்தியா

    CrPC சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டதால் சர்ச்சை 

    உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கிடப்பில் போட்டதுடன், நீதிபதிகள் இது குறித்து முடிவெடுக்கும் வரை கேள்வி விசாரணை செய்வதில் இருந்து அவருக்கு விலக்கு அளித்தது.

    சிபிஐ தற்போது CrPC சட்டத்தின் பிரிவு 41A இன் கீழ் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதை அவர் மீறினால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

    இந்தப் பிரிவின் கீழ் ஏன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்பது குறித்து கவிதா தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட டெல்லியின் மதுக் கொள்கை ஊழலில் கிக்பேக் மூலம் பயனடைந்த "சவுத் கார்டெல்" அமைப்பில் கவிதாவும் இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    பிரிஜ் பூஷன் மல்யுத்த வீரர்களை மிரட்டினார்: டெல்லி போலீசார் பிரிஜ் பூஷன் சரண் சிங்
    கடுமையான குளிர் காரணமாக டெல்லியில் பள்ளிகள் மூடல்  இந்தியா
    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வட இந்தியாவில் நில அதிர்வு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025