NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பிரார்த்தனை தொடரும்: மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பிரார்த்தனை தொடரும்: மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம் 

    ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பிரார்த்தனை தொடரும்: மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 26, 2024
    12:50 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்து மத வழிபாடுகளை நடத்த அனுமதிக்கும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

    "வியாஸ் தெஹ்கானாவில் இந்து பிரார்த்தனைகள் தொடரும்" என்று கூறிய நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் மசூதி குழுவின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    தனது தாய்வழி தாத்தா சோம்நாத் வியாஸ் டிசம்பர் 1993 வரை அந்த பாதாள பிரார்த்தனை செய்தார் என்றும், அதனால் தன்னையும் அங்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் ஷைலேந்திர குமார் பதக் என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்தியா 

    மனுதாரரின் கருத்தை மறுத்த மசூதி நிர்வாகம்

    அந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் , வியாஸ் தெஹ்கானா என்று அழைக்கப்படும் ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்யலாம் என்று கடந்த மாதம் தீர்ப்பளித்தது.

    அந்த மசூதியின் அடித்தளத்தில் நான்கு பாதாள அறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இப்போது வரை வியாஸ் குடும்பத்துக்கு சொந்தமானதாக உள்ளது.

    ஆனால், பாதாள அறையில் சிலைகள் எதுவும் இல்லாததால், 1993 வரை அங்கு பூஜைகள் நடத்தப்பட்டன என்ற கேள்விக்கே இடமில்லை என்று மனுதாரரின் கருத்தை மசூதி நிர்வாகம் மறுத்தது.

    அதோடு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தை மசூதி நிர்வாகம் அணுகியதை தொடர்ந்து, தற்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ
    மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள் உடல் ஆரோக்கியம்
    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    உயர்நீதிமன்றம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    ரவீந்திரநாத் வெற்றி செல்லாது : மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லாத கட்சியாக மாறிய அதிமுக அதிமுக
    மணிப்பூர் வன்முறை: 2 மாதகாலமாக தொடரும் 'இன்டர்நெட்' தடையை நீக்க உத்தரவு  மணிப்பூர்
    வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடிய இளம் மல்யுத்த வீரர்கள் மல்யுத்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025