NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை 

    மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 25, 2024
    02:15 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுவதாகப் போலிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் அட்டவணை எப்போதும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பரப்பப்படாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

    பொதுத் தேர்தலுக்கான முழு அட்டவணையையும் போலி செய்தியாக வெளியாகியுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டு மார்ச் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்படும் என போலி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, மார்ச் 28 என்றும், வாக்குப்பதிவு தேதி ஏப்ரல் 19 என்றும், முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் மே 22 என்றும் போலி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தல் 

    'வாட்ஸ்அப் செய்தி பொய்யானது': தேர்தல் ஆணையம் 

    வாட்ஸ்அப் குழுக்களில் தேர்தல் ஆணையத்தின் லெட்டர்ஹெட்டுடன் போலியான செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து, பொதுத் தேர்தலை எப்படி ஒரே கட்டமாக நடத்த முடியும் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இந்த குழப்பத்திற்கு மத்தியில், வைரலான செய்தி போலியானது என தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்துள்ளது.

    "மக்களவைத் தேர்தல் 2024க்கான அட்டவணை தொடர்பாக Whats app-ல் ஒரு போலி செய்தி பகிரப்படுகிறது. அந்த செய்தி பொய்யானது. ECIஆல் இதுவரை எந்த தேதியும் அறிவிக்கப்படவில்லை" என்று ட்விட்டரில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மக்களவை

    சட்டமானது மகளிர் இடஒதுக்கீடு மசோதா; ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு நாடாளுமன்றம்
    மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம்; திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு நெறிமுறைக்குழு சம்மன் திரிணாமுல் காங்கிரஸ்
    திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு  நாடாளுமன்றம்
    எம்பி மஹுவா மொய்த்ரா மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க இருப்பதாக தகவல்  திரிணாமுல் காங்கிரஸ்

    தேர்தல்

    தேமுதிக கட்சியில் திடீர் மாற்றம்? விஜயகாந்த் மனைவி மற்றும் மகனுக்கு முக்கிய பொறுப்பு? தேமுதிக
    தேமுதிக கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக
    2023ல் தமிழக அரசு அறிமுகப்படுத்திய மாஸ் திட்டங்கள் என்னென்ன? - பார்ப்போம் வாருங்கள்  மு.க ஸ்டாலின்
    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது பாகிஸ்தான்

    தேர்தல் ஆணையம்

    அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் - எடப்பாடி பழனிச்சாமி  அதிமுக
    கர்நாடகா தேர்தல் பார்வையாளராக தமிழகத்தின் 11 ஐஏஎஸ் மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்  கர்நாடகா
    பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025