NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹிமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாஜக
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹிமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாஜக
    பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து, காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரியுள்ளனர்

    ஹிமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாஜக

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 28, 2024
    11:03 am

    செய்தி முன்னோட்டம்

    ஹிமாச்சல பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஆளுநரை சந்தித்து பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

    ஹிமாச்சலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சி, ராஜ்யசபா தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து, மாநில சட்டசபையில், சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரியுள்ளனர்.

    இது குறித்து, பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய்ராம் தாக்கூர், கட்சி எம்எல்ஏக்களுடன் புதன்கிழமை ராஜ்பவனில் ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்தித்துள்ளார்.

    ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் தாக்கூர்,"ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார். தற்போது, ​​காங்கிரஸ் அரசு, ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துள்ளது" என தெரிவித்தார்.

    ராஜ்ய சபா தேர்தல்

    ஹிமாச்சல பிரதேச ராஜ்ய சபா தேர்தலில் பாஜக வெற்றி

    நேற்று நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் ஹிமாச்சல பிரதேசத்தில், பிஜேபியின் ஹர்ஷ் மகாஜன், காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வியை தோற்கடித்தார்.

    6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதால், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோரை காங்கிரஸ் மேலிடம் அனுப்பி வைத்துள்ளது.

    இந்த நிலையில், ராஜ்யசபா தேர்தலில் வாக்களித்துவிட்டு ஆறு எம்.எல்.ஏ.க்களும் சிம்லாவில் இருந்து ஹரியானாவுக்கு புறப்பட்டனர்.

    முன்னதாக புதன்கிழமை அன்று, பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், ஹெலிகாப்டர் மூலம் ஹிமாச்சல் தலைநகருக்கு வாக்களிக்க மீண்டும் அழைத்து வரப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹிமாச்சல பிரதேசம்
    பாஜக
    காங்கிரஸ்

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    ஹிமாச்சல பிரதேசம்

    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா

    பாஜக

    ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்க இருப்பதாக அறிவித்தது கர்நாடக அரசு கர்நாடகா
    'இந்திக்காரர்கள் தமிழகத்தில் கழிப்பறைக் கழுவுகிறார்கள்': தயாநிதி மாறனின் பேச்சால் சர்ச்சை  திமுக
    மத்தியப் பிரதேசத்தில் 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு மத்திய பிரதேசம்
    பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி  திமுக

    காங்கிரஸ்

    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார் ராகுல் காந்தி
    ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல்  கர்நாடகா
    இந்திக்காரர்கள் குறித்து தயாநிதி மாறன் பேசிய விவகாரம்: ராகுல் காந்தியை கடுமையாக சாடினார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா ராகுல் காந்தி
    ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025