11 Aug 2025
ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராஜஸ்தானுக்கு அஸ்வினை விட்டுக் கொடுக்கிறதா சிஎஸ்கே?
ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனையும் தன்னையும் இணைத்து பரவும் ஊகங்கள் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
இந்தியாவில் ₹1.84 லட்சத்திற்கு கேடிஎம் 160 டியூக் பைக் அறிமுகமானது; விலை எவ்வளவு?
கேடிஎம் இந்தியா அதன் சமீபத்திய மாடலான 160 டியூக்கை ₹1.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தொலைபேசியில் உரையாடல்; இருவரும் பேசியது என்ன?
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்களன்று (ஆகஸ்ட் 11) விரிவான தொலைபேசி உரையாடலை நடத்தினார்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து ஆதரவு தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்
சென்னையில் கடந்த 11 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
பலூசிஸ்தான் குண்டுவெடிப்பில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் தடம் புரண்டன
பாகிஸ்தானின் பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜாஃபர் எக்ஸ்பிரஸின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த வாரம் அறிமுகமாகிறது FASTag வருடாந்திர பாஸ்: விவரங்கள் உங்களுக்காக
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆகஸ்ட் 15, 2025 அன்று புதிய FASTag வருடாந்திர பாஸை அறிமுகப்படுத்த உள்ளது.
துப்பாக்கிச் சுடுதலில் பாதிக்கப்பட்ட கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கொலம்பியாவின் ஒரு முக்கிய வலதுசாரி எதிர்க்கட்சி பிரமுகரும், எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி வேட்பாளருமான, 39 வயதே ஆன செனட்டர் மிகுவல் யூரிப் உயிரிழந்தார்.
சுதந்திர இந்தியாவில் விளையாட்டுத்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம்; மக்களவையில் நிறைவேறியது மசோதா
மக்களவை திங்கட்கிழமை தேசிய விளையாட்டு நிர்வாகம் மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (திருத்தம்) மசோதாவை நிறைவேற்றியது.
இந்தியாவில் 3 லிமிடெட்-ரன் மாடல்களுடன் 25 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது Skoda
ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது பிரபலமான மாடல்களான குஷாக், ஸ்லாவியா மற்றும் கைலாக் ஆகியவற்றின் சிறப்பு 25வது ஆண்டு நிறைவு வரையறுக்கப்பட்ட பதிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிர்கால எரிபொருள் இதுதான்; 100 சதவீத பயோ-எத்தனால் எரிபொருள் பயன்பாட்டிற்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்
இந்தியாவின் போக்குவரத்துத் துறை 100% பயோ-எத்தனாலை எதிர்கால எரிபொருளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தனது தொலைநோக்குப் பார்வையை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நண்பருக்கு அவசரத்துக்கு கடன் கொடுத்தாலும் வருமான வரித்துறை அபராதம் விதிக்குமா? இந்த சட்டங்களை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்
வரி ஆலோசனை தளமான TaxBuddy பகிர்ந்து கொண்ட சமீபத்திய வழக்கு, நண்பர்களிடையே மேற்கொள்ளப்படும் பெரிய ரொக்க பரிவர்த்தனைகள் கூட வருமான வரித்துறையிடம் இருந்து கடுமையான அபராதங்களை பெறுவதற்கான வாய்ப்பை வெளிப்படுத்தி உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை(ஆகஸ்ட் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Grok 4 இப்போது அனைத்து பயனர்களுக்கும் இலவசம் ஆனால்..
எலான் மஸ்க்கின் xAI அதன் சமீபத்திய AI மாடலான Grok 4 ஐ அனைத்து பயனர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகக் கிடைக்கச் செய்துள்ளது.
செப்டம்பர் 1 முதல் வாஷிங்டனுக்கான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு
செயல்பாட்டு கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான விமான மேம்படுத்தல்களின் கலவையை மேற்கோள் காட்டி, ஏர் இந்தியா செப்டம்பர் 1 முதல் டெல்லி-வாஷிங்டன் விமானங்களை நிறுத்துவதாக அறிவித்துளளது.
'இப்போ தெரியுதா?': அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானின் அசிம் முனீரின் கூற்றுக்கு இந்தியா பதிலடி
அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் விடுத்த அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) பதிலளித்துள்ளது.
முக்கிய திருத்தங்களுடன் மாற்றியமைக்கப்பட்ட வருமான வரி மசோதா 2025ஐ மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று மக்களவையில் மாற்றியமைக்கப்பட்ட வருமான வரி (எண்.2) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார்.
படத்தின் லாபத்தில் பங்கு; தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கத் தயாராகி வரும் நடிகர் சூரி?
கருடன் மற்றும் மாமன் போன்ற படங்களில் சமீபத்திய வெற்றிகளுக்குப் பிறகு, பிரபல தமிழ் நடிகர் சூரி, திரைப்படத் துறையில் அடுத்த கட்டமாக தயாரிப்பாளராகவும் களமிறங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகரிலுள்ள தெருநாய்கள் உடனடியாக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் - உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவு
தெருநாய்கள் தாக்குதலால் ஏற்படும் ரேபிஸ் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் (NCR) பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து தங்குமிடங்களுக்கு மாற்ற கடுமையான உத்தரவை பிறப்பித்தது.
தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
வீடற்ற மக்கள் வாஷிங்டன் டிசியை விட்டு 'உடனடியாக' வெளியேற வேண்டும்: டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வீடற்ற மக்கள் வாஷிங்டன், டி.சி.யை "உடனடியாக" காலி செய்யுமாறு கோரியுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புது தில்லியில் பாதுகாப்பு அமைப்புகள் உயர் எச்சரிக்கையை விடுத்துள்ளன.
தூய்மைப் பணி தனியார்மயமாக்கல் விவகாரம்; சென்னை மாநகராட்சி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
இரண்டு நகர மண்டலங்களில் துப்புரவுப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனது பதிலைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
உணவகங்கள் பதிவு செய்யும் போது சைவம், அசைவம் உள்ளிட்ட விவரங்கள் அவசியமாக வெளியிடப்படவேண்டும்
விரைவில், இந்திய உணவகங்கள், பதிவு செய்யும்போதோ உரிமத்தை புதுப்பிக்கும்போதோ, தங்களது உணவுப் வகைகள் மற்றும் மெனு விவரங்களை கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டிய உத்தரவு விரைவில் வெளியாகக்கூடும்.
30 லட்சம் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு ₹3,200 கோடி இழப்பீடு வழங்க உள்ளது
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் ஒரு பகுதியாக ₹3,200 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் JAG ஆட்சேர்ப்பில் பாலின அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை
இந்திய ராணுவத்தின் நீதிபதி அட்வகேட் ஜெனரல் (JAG) பிரிவில் ஆண் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான 2:1 இடஒதுக்கீடு கொள்கையை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) செல்லாததாக்கி, ஆட்சேர்ப்பு தகுதியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படத்தின் ப்ரீ-புக்கிங் டிக்கெட் விற்பனை ₹50 கோடியைத் தாண்டியது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படம் ஏற்கனவே வசூலில் சாதனை படைத்து வருகிறது.
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார பேருந்துகள் சேவை அறிமுகம்
தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மேற்கொண்ட முக்கிய முன்னெடுப்பாக, முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஏசி பேருந்துகள் இன்று முதல் (ஆகஸ்ட் 11) முதல் முறையாக அறிமுகமாகின்றன.
'ரத்தன் உயிருடன் இருந்திருந்தால்...': AI171 விபத்தில் இழந்தவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து வழக்கறிஞர் வருத்தம்
ஏர் இந்தியா விமானம் AI171 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ் கடுமையாக சாடியுள்ளார்.
போலி வாலட் எக்ஸ்டன்சன்களை பயன்படுத்தி $1 மில்லியனுக்கும் அதிகமாக கிரிப்டோகரன்சி திருட்டு
GreedyBear என்ற பெரிய அளவிலான சைபர் கிரைம் மோடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, இது Mozilla Firefox இல் 150 க்கும் மேற்பட்ட மோசடியான பிரவுசர் எக்ஸ்டன்சன்கள் மூலம் கிரிப்டோகரன்சி பயனர்களை குறிவைத்து செயல்பட்டுள்ளது.
துருக்கியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஒருவர் பலி மற்றும் பலர் காயம்
துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம் (AFAD) அறிக்கையின் படி, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) இரவு மேற்கு துருக்கியில் உள்ள சிந்திர்கி நகரில் 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
முழங்கால் பிரச்சினைகளுக்கு மத்தியில் எம்.எஸ்.தோனி IPL 2026க்கு திரும்புவாரா?
2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனியின் எதிர்காலம் குறித்து பரவலாக பேசப்படுகிறது.
2025 ஷாங்காய் மாஸ்டர்ஸ்: 3 வருட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் கோர்ட்டில் களமிறங்கும் ரோஜர் ஃபெடரர்
சுவிஸ் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் 2025 ரோலக்ஸ் ஷாங்காய் மாஸ்டர்ஸுக்காக ஷாங்காயில் மீண்டும் களமிறங்க உள்ளார்.
செப்டம்பரில் ஐநா சபையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள் பட்டியலில் இணைந்தது ஆஸ்திரேலியா
செப்டம்பரில் நடைபெறும் ஐநா சபையின் பொதுச்சபை கூட்டத்தில் ஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (ஆகஸ்ட் 11) அறிவித்தார்.
சவரனுக்கு ₹560 குறைவு; இன்றைய (ஆகஸ்ட் 11) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.
வாக்காளர் முறைகேடு தொடர்பாக தேர்தல் அலுவலகத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி
எதிர்க்கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) திங்கட்கிழமை டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வரை எதிர்ப்பு பேரணி நடத்துவார்கள்.
மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை அறிமுகம்: என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் திருத்தப்பட்ட வருமான வரி மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்துவார்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்
காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
சிறுநீரக முறைகேடு; 2 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து
தமிழகத்தில் இரு தனியார் மருத்துவமனைகள் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திக்..திக்..தருணம்! 5 MPக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு
ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால், ஏர் இந்தியா விமானத்தில் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு பயணித்தபோது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார்.
பாதி உலகத்தை அழிப்போம்: அமெரிக்காவிலிருந்து இந்தியா நோக்கி அணுஆயுத மிரட்டல் விடுத்த அசிம் முனீர்
பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், அமெரிக்காவில் பேசும்போது இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
10 Aug 2025
விமானிகளின் ஓய்வு வயதை 58இல் இருந்து 65 ஆக உயர்த்தியது ஏர் இந்தியா
ஏர் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை திருத்தத்தை அறிவித்து, அதன் விமானிகளின் ஓய்வூதிய வயதை 58 இலிருந்து 65 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா குறித்த ஒருநாள் ஓய்வு ஊகங்களுக்கு சவுரவ் கங்குலி பதில்
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலத்தைச் சுற்றியுள்ள ஊடக ஊகங்கள் குறித்து முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
மகனுக்காக வாதாட 90 வயதில் சட்டம் கற்கும் தாய்; சீனாவில் நெகிழ்ச்சி
சீனாவில் 90 வயது பெண் ஒருவர், ரூ.141 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தனது மகனுக்காக வாதாடுவதற்காக தானே சட்டம் பயின்று பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார்.
அமெரிக்க வரி உயர்வால் பாதிப்பு; இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசிடம் அவசர நிவாரணம் வழங்க கோரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இந்திய இறால் ஏற்றுமதி மீதான வரிகளை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்திய கடல் உணவு ஏற்றுமதி சங்கம் (SEAI) அவசர நிதி உதவிக்காக வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய விண்வெளி பயணத்தில் புதிய மைல்கல்; அமெரிக்காவின் 6,500 கிலோ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு வரலாற்று மைல்கல்லை அடையத் தயாராகி வருகிறது.
பீகார் SIR இல் எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை; தேர்தல் ஆணையம் தகவல்
ஆகஸ்ட் 1-10 காலத்தில் பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல்கள் தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமைகோரல்கள் அல்லது ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) அறிவித்தது.
ரமேஷ் புத்தியலுக்கு வெண்கலம்; ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பதக்கம் வென்றது இந்தியா
ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ரமேஷ் புத்தியல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) படைத்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஆகஸ்ட் 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மும்பையில் eSIM மோசடியில் ரூ.4 லட்சம் இழந்த நபர்; உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
பாரம்பரிய சிம் கார்டுகளுக்கு மாற்றாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வரும் eSIM (உட்பொதிக்கப்பட்ட சிம்), இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களிடையே தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.
விஜய் சேதுபதி-நித்யா மேனனின் தலைவன் தலைவி ஓடிடியில் எப்போது ரிலீஸ்? வெளியான புது தகவல்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பெற்றுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆப்பு வைக்கும் இந்தியா, சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் எழுச்சி; மீண்டும் வைரலாகும் நூற்றாண்டு பழமையான கார்ட்டூன்
உலக சக்தி மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து சீனா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு மாறுவதை முன்னறிவிக்கும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையான அரசியல் கார்ட்டூன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மீண்டும் வைரலாகி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூரில் தொழில்நுட்பத்தால் கிடைத்த வெற்றி; பெங்களூரில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) மூன்று புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு இடமில்லை? பிசிசிஐ முடிவு என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
6 மாதத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட திருடப்பட்ட போன்கள் சஞ்சார் சாதி செயலியின் உதவியுடன் மீட்பு
தொலைத்தொடர்புத் துறையின் (DoT) சஞ்சார் சாதி முயற்சி இந்தியா முழுவதும் 5.35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களை மீட்டெடுத்துள்ளது.
எம்எஸ் தோனி இடம்பெறும் C3X கூபே எஸ்யூவி மாடலுக்கான டீசரை வெளியிட்டது சிட்ரோயன்
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் அதன் வரவிருக்கும் C3X கூபே எஸ்யூவிக்கான புதிய டீசரை வெளியிட்டுள்ளது.
என்னது இது; அஜித் இப்படி சொல்லிட்டாரே.. வைரலாகும் அஜித்-ஷாலினி கியூட் வீடியோ
நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினியை நகைச்சுவையாக கேலி செய்யும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு
சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) மாலை ரஷ்யாவை ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் தாக்கியது. குரில் தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
வாக்காளர் பெயர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் நீக்கம் கிடையாது; தேர்தல் ஆணையம் பிரமாணப் பாத்திரம் தாக்கல்
பீகாரில் தகுதியுள்ள எந்த வாக்காளரும் முன் அறிவிப்பு இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
தினமும் பச்சையாக பூண்டு சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? ஆனா இந்த தப்ப பண்ணிடாதீங்க
சமையலறையில் பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான பூண்டு, அதன் சுவைக்காக மட்டுமல்லாமல், அதன் ஈர்க்கக்கூடிய சுகாதார நன்மைகளுக்காகவும், குறிப்பாக பச்சையாக உட்கொள்ளும்போதும் மதிப்பிடப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூரை செஸ் விளையாட்டு போல் இருந்தது; ஐஐடி மெட்ராஸில் இந்திய ராணுவத் தளபதி பேச்சு
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய ராணுவ மோதலை செஸ் போட்டி என்று இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி விவரித்தார்.