
படத்தின் லாபத்தில் பங்கு; தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கத் தயாராகி வரும் நடிகர் சூரி?
செய்தி முன்னோட்டம்
கருடன் மற்றும் மாமன் போன்ற படங்களில் சமீபத்திய வெற்றிகளுக்குப் பிறகு, பிரபல தமிழ் நடிகர் சூரி, திரைப்படத் துறையில் அடுத்த கட்டமாக தயாரிப்பாளராகவும் களமிறங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் துணை நடிகராக வந்து, காமெடி நடிகராகி, பின்னர் தற்போது கதையின் நாயகனாக படங்களில் நடித்து வருகிறார். கதை நாயகனாக தொடர்ச்சியான வெற்றிகளைத் தொடர்ந்து, முன்னணி இயக்குநர்கள் அவருக்கு கதை கூறவும், பல தயாரிப்பாளர்கள் அவரது தேதிகளுக்காகவும் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே நடிகர் சூரி, தற்போது அடுத்து வரவிருக்கும் தனது மண்டாடி திரைப்படத்தில் முழுமூச்சாக கவனம் செலுத்தி வருகிறார்.
தயாரிப்பு
வணிக லாபத்தில் பங்கு
சூரி நடிப்புக்கென தனியாக ஊதியம் பெறுவதைத் தாண்டி, எதிர்கால படங்களில் இணை தயாரிப்பாளராக இணைந்து பணியாற்றவும், ஒட்டுமொத்த வணிக லாபத்தில் ஒரு பங்கைப் பெறவும் முடிவு செய்துள்ளதாக சினிமா தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அணுகுமுறை, ஒரு மூலோபாய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது, இது அவருக்கு அதிக படைப்பு மற்றும் நிதி கட்டுப்பாட்டை வழங்கக்கூடிய ஒரு புத்திசாலித்தனமான தொழில் நடவடிக்கையாக பலரால் வரவேற்கப்படுகிறது. இதற்கிடையே, அவரது மண்டாடி திரைப்படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. மேலும், இது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படம் முடிந்ததும், இயக்குனர் வெற்றிமாறனின் ஒரு படத்தில் சூரி பணிபுரிய உள்ளார்.