11 Aug 2024

WIvsSA முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் சாதனை படைத்த கிரேக் பிராத்வைட்

வெஸ்ட் இண்டீசின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் கிரேக் பிராத்வைட் 131 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 26.72 ஆகும்.

ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவளித்தது சரிதான்; காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து

ஷேக் ஹசீனா பங்களாதேஷின் பிரதமராக இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இந்தியா உதவாமல் இருந்திருந்தால் அது அவமானமாக இருந்திருக்கும் என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தூதரக அதிகாரியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

2024-25 நிதியாண்டில் பங்குச் சந்தையில் சுமார் ₹1.3 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்ஐசி முடிவு

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நடப்பு நிதியாண்டில் பங்குச் சந்தையில் சுமார் ₹1.3 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதன் எம்டி மற்றும் சிஇஓ சித்தார்த்த மொஹந்தி தெரிவித்தார்.

விலங்குகளிடையே தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், கொரோனாவுக்கு காரணமான சார்ஸ் கோவ்-2 (SARS-CoV-2) வைரஸ், இப்போது வனவிலங்குகளிடையே பரவலாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயின்ட் மார்டின் தீவை தர மறுத்ததால் அமெரிக்காவின் சதிவேலை; ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டு

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் அமெரிக்காவின் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அனைத்து காலநிலையையும் தாங்கி வளரக்கூடிய புதிய பயிர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) 109 அதிக மகசூல் தரும், பல்வேறு தட்பவெப்பத்தைத் தாங்கக்கூடிய மற்றும் உயிரி வலுவூட்டப்பட்ட பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

சுனில் சேத்ரிக்கு மாற்று யார்? இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் செய்தியாளர் சந்திப்பு

ஆடவர் இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்திய கால்பந்து பற்றிய தனது எண்ணங்களை விளக்கினார்.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் நடிகர் தனுஷ் 

கோலிவுட் நடிகரும் இயக்குனருமான தனுஷ் சமீபத்தில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹25 லட்சத்தை வழங்கியுள்ளார்.

போதிய வரவேற்பு இல்லாததால் பெயிண்ட் 3டி செயலிக்கு நவம்பர் 4 முதல் ஓய்வு; மைக்ரோசாப்ட் அறிவிப்பு

இந்த ஆண்டு நவம்பரில் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் இருந்து பெயிண்ட் 3டி செயலியை நீக்க உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹைபிரிட் கார் வைத்துள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

சுற்றுச்சூழல் மற்றும் வாகன உமிழ்வின் தாக்கம், உமிழ்வு விதிமுறைகளை கடுமையாக்குதல் மற்றும் மின்மயமாக்கலில் அதிக கவனம் செலுத்துதல் ஆகியவற்றுக்கு இடையே ஹைபிரிட் கார்கள் இந்திய சந்தையில் பிரபலமடைந்து வருகின்றன.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்களின் முழு பட்டியல்

மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடா 76 கிலோ மல்யுத்த ஃப்ரீஸ்டைல் ​​போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, இந்தியாவின் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு முழுமையாக முடிவுக்கு வந்தது.

பற்களை அதிகம் இழந்தவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு அதிகம்; ஆய்வில் தகவல்

ஒரு சமீபத்திய ஆய்வில், பற்களை இழப்பதற்கும் ஆபத்தான மாரடைப்பு போன்ற இதய நோய் அபாயத்திற்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் ட்ரோன் தாக்குதல்; 150க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பலி

மியான்மரின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற குழந்தைகள் உட்பட குறைந்தது 150 ரோஹிங்கியாக்கள் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு செபி தலைவர் மற்றும் அவரது கணவர் மறுப்பு அறிக்கை வெளியீடு

இந்தியாவின் பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியின் தலைவர் சமீபத்திய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தூண்டுதல்களின் பேரில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி கடுமையாக நிராகரித்துள்ளார்.

பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள்

பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சிறுபான்மை சமூகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லோகார்னோ திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார் நடிகர் ஷாருக்கான்

சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 10) நடந்த மதிப்புமிக்க லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய நடிகர் ஷாருக்கான் பெற்றார்.

காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் திவால்; தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் அறிவிப்பு

காபி டே குழுமத்தின் தாய் நிறுவனமான காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் (சிடிஇஎல்) மீது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (என்சிஎல்டி) திவால் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

ஒலிம்பிக் ஆர்டர்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயரிய விருது வென்றார் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா

இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு பாரிஸில் நடந்த 142வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அமர்வில் 'ஒலிம்பிக் ஆர்டர்' விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.நட்வர் சிங் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ர் 10) காலமானார். அவருக்கு வயது 93.

10 Aug 2024

லஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

உத்தரபிரதேசத்தின் கன்னோஜில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், உருளைக்கிழங்கு என்ற வார்த்தை லஞ்சத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

காஷ்மீரில் தீவிரவாதில் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயம்

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் கோகர்நாக் பகுதியில் உள்ள அஹ்லான் பகுதியில் பயங்கரவாதிகளுடன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடந்த என்கவுன்டரில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எக்ஸ் தளத்தில் வருகிறது பணப்பரிமாற்ற சேவை; ஆராய்ச்சியாளர் வெளியிட்ட தகவல்

ட்விட்டரை எலோன் மஸ்க் கையகப்படுத்தியதிலிருந்து, அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் எலோன் மஸ்க், அதை இன்னும் விரிவான வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செயல்படுத்த முயற்சி செய்கிறார்.

மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ சேவைகள் அறிமுகம்; புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைச்சர் ஜெய்சங்கர்

மாலத்தீவில் யுபிஐ பணப்பரிமாற்ற சேவையை நடைமுறைப்படுத்துவதற்காக மாலத்தீவுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சிவகார்த்திகேயன்-ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த மலையாள நடிகர் பிஜு மேனன்

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே23 படத்தில் மலையாள நடிகர் பிஜு மேனன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பங்களாதேஷின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் ராஜினாமா செய்ய முடிவு

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, பங்களாதேஷில் புதிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

கானாவை விலைக்கு வாங்கியது ரேடியோ மிர்ச்சியின் தாய் நிறுவனம் இஎன்ஐஎல்

எஃப்எம் ரேடியோ பிராண்டான ரேடியோ மிர்ச்சியின் தாய் நிறுவனமான என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் இந்தியா லிமிடெட் (இஎன்ஐஎல்), கடந்த ஆண்டு வெறும் ₹25 லட்சத்திற்கு இசை ஸ்ட்ரீமிங் தளமான கானாவை வாங்கியது.

பிக்பாஸ் போட்டியாளரை நம்பி மோசடியில் சிக்கிய பொதுமக்கள்; எக்ஸ் தளத்தில் இதுதான் ட்ரெண்டிங்

பிரபல யூடியூபரும், முன்னாள் இந்தி பிக் பாஸ் ஓடிடி போட்டியாளருமான அபிஷேக் மல்ஹான், ஹைபாக்ஸ் என்ற மோசடி செயலியை விளம்பரம் செய்ததாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

ஸ்னாப்சாட்டின் ஸ்னாப் அம்சத்தை இன்ஸ்டாகிராமில் சேர்க்க திட்டம்; சோதனை ஓட்டம் தொடக்கம்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட்டின் ஸ்னாப் வரைபடத்தை பிரதிபலிக்கும் புதிய அம்சத்தை தனது தளத்திலும் சேர்ப்பதற்கான சோதனைகளைத் தொடங்கியுள்ளது.

கேரளா வயநாடு நிலச்சரிவை நேரடியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 11 மணியளவில் கேரளாவின் கண்ணூர் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் வயநாடு மாவட்டத்திற்கு சென்றார்.

அமெரிக்காவில் தயாராகும் 100 வீடுகளைக் கொண்ட உலகின் முதல் 3டி பிரிண்டிங் குடியிருப்பு

3டி பிரிண்டிங் மூலம் சிறுசிறு பொருட்களை உருவாக்கியதுபோல, 100 தனித்தனி வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பு வளாகம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

விரைவில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா; மகன் சஜீப் வசேத் ஜாய் தகவல்

ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்ததாக கூறப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்னும் அதிகாரப்பூர்வமாக பதவியை ராஜினாமா செய்யவில்லை என அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் கூறியுள்ளார்.

ரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் பசால்ட் கூபே-எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது சிட்ரோயன்

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூபே-எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி புற்றுநோயால் மரணம்

யூடியூப் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் தனது 56 வயதில் காலமானார். வோஜ்சிக்கியின் கணவர் டென்னிஸ் ட்ரோப்பர் ஃபேஸ்புக் பதிவில் இதை பகிர்ந்துள்ளார்.

ஆயிரக்கணக்காக ஊழியர்களை மீண்டும் ஆட்குறைப்பு செய்ய சிஸ்கோ முடிவு

அமெரிக்காவை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற நெட்வொர்க்கிங் உபகரண உற்பத்தியாளரான சிஸ்கோ சிஸ்டம்ஸ் குறிப்பிடத்தக்க அளவில் பணியாளர்களைக் குறைக்கத் தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எஸ்டி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கொண்டுவர மாட்டோம் என மத்திய அரசு அறிவிப்பு

பட்டியலினத்தவர்கள் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) இடஒதுக்கீட்டிற்குள் கிரீமி லேயர் வரையறையை கொண்டுவர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.

உலக சிங்க தினம் 2024: அழிவின் விளிம்பில் உள்ள காட்டு ராஜாக்களை மீட்பதற்கான முன்னெடுப்பு

உலக சிங்க தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிங்கங்களை பாதுகாப்பதும், அதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த தினத்தின் நோக்கமாகும்.

மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெற்றி; பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக ஆறாவது பதக்கத்தை வென்றுள்ளார்.