Page Loader
காஷ்மீரில் தீவிரவாதில் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயம்
இந்திய ராணுவம்

காஷ்மீரில் தீவிரவாதில் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 10, 2024
07:51 pm

செய்தி முன்னோட்டம்

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் கோகர்நாக் பகுதியில் உள்ள அஹ்லான் பகுதியில் பயங்கரவாதிகளுடன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடந்த என்கவுன்டரில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதியம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதல் குழுவினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, அவர்கள் பதிலடி கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.

அதிகரிக்கும் தாக்குதல்கள்

ஜம்மு காஷ்மீரில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்கள் 

பாதுகாப்புப் படைகள் ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக நீடித்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்திய பிறகு, 2005 மற்றும் 2021 க்கு இடையில் ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்த ஜம்மு பகுதியில், கடந்த மாதங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதில் யாத்ரீகர் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர். 2021 அக்டோபரில் இரட்டை எல்லை மாவட்டங்களான பூஞ்ச் ​​மற்றும் ரஜோரியில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்கியது. 2021ஆம் ஆண்டு முதல் ஜம்மு பகுதியில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் 52 பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.